அமீரக செய்திகள்

துபாய்: ஒரு நம்பரில் மிஸ்ஸான அதிர்ஷ்டம்..!! 100 மில்லியன் திர்ஹம்ஸை தவறவிட்டு 250,000 திர்ஹம்ஸை வென்ற இந்தியர்… எமிரேட்ஸ் டிராவில் ஏற்பட்ட நிகழ்வு..!!

துபாயில் நடத்தப்பட்டு வரும் எமிரேட்ஸ் டிராவில் 100 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசை ஒரு நம்பரில் தவறவிட்டுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த அலெக்ஸ் சேவியர் பெர்னாண்டஸ். இதன் காரணமாக, எமிரேட்ஸ் டிராவின் MEGA7 இரண்டாம் பரிசான 250,000 திர்ஹம் ரொக்கப் பரிசை அவர் வென்று பரிசுத்தொகையை பெற்றுள்ளார்.

முதன்முதலில் 1996 ஆம் ஆண்டு பொருள் ஈட்டும் பொருட்டு துபாய்க்கு வந்த அலெக்ஸ், தற்பொழுது எண்ணெய் மற்றும் எரிவாயு சேவைத் துறையில் முக்கிய வேலையில் உள்ளார். துபாய் வந்து ​​27 ஆண்டுகளுக்குப் பிறகு, எமிரேட்ஸ் டிராவில் 7 இல் 6 எண்களைப் பொருத்தி இரண்டாம் பரிசை வென்றுள்ளார்.

இந்த மிகப்பெரிய வெற்றிக்கான தனது உத்தி குறித்து அலெக்ஸ் விவரிக்கையில், டிராவில் ஒரு சில முறை மிகச் சிறிய தொகையை வென்றதாகவும், அந்த தொகையை வைத்து அடுத்த டிராவிற்கான டிக்கெட்டுகளை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

நீண்ட முயற்சிக்குப் பிறகு, எமிரேட்ஸ் டிராவிலிருந்து வெற்றி பெற்றதாக வந்த ஈமெயில் வீட்டில் உற்சாகத்தை ஏற்படுத்தியதாக அலெக்ஸ் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மேலும், வெற்றி பெற்ற பணத்தில் இரத்த தான இயக்கங்களில் பங்கேற்பதன் மூலமும், தொண்டு நிறுவனங்களுக்கு பங்களிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்த வெற்றியைத் தொடர்ந்து 100 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசை வெல்லலாம் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து விளையாடப்போவதாக உறுதியளித்துள்ளார்.

அடுத்ததாக, இன்று (ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 8, 2023) அன்று, அமீரக நேரப்படி இரவு 9 மணிக்கு ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ள அடுத்த கேமில் கலந்துகொள்வதன் மூலம் பங்கேற்பாளர்கள் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!