அபுதாபி சாலைகளில் எக்ஸிட் மற்றும் கிராஸிங்களில் புதிய ரேடாரை ஆக்டிவேட் செய்த காவல்துறை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலைப் பாதுகாப்பை அதிகரிக்கவும், விதிமீறல்களைத் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தற்போது தலைநகர் அபுதாபியில் பாதசாரிகள் கடக்கும் பகுதிகள் மற்றும் சாலையின் எக்ஸிட் இடங்களில் விதிமீறல்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் புதிய ரேடார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், இந்த ரேடார் அமைப்பின் தானியங்கி கட்டுப்பாட்டை க்ராஸிங் சாலையில் அபுதாபி காவல்துறை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் ‘EXIT-I’ கருவிகள், கடக்கும் பகுதிகளில் பாதசாரிகளுக்கு சரியான வழியைக் கொடுக்காத வாகன ஓட்டிகளைக் கண்டுபிடிக்கும் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இந்த அமைப்புகளால் இன்டெர்செக்சன் மற்றும் க்ராஸிங்கில் சட்டவிரோதமாக வாகனங்களை முந்திச் செல்பவர்கள், போக்குவரத்துக்கு இடையூறாக எக்ஸிட் பாதையில் திரும்பும் வாகன ஓட்டிகள் போன்ற விதிமீறல்களையும் கண்டறிய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாலைகளில், வாகன ஓட்டிகள் மற்றும் மற்ற சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை பாதுகாப்பதற்கும், போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்கும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி எச்சரிப்பதுமே இந்த அமைப்புகளின் நோக்கமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel