அமீரக செய்திகள்

துபாய்: பாலத்தில் கான்கிரீட் தடுப்பை உடைத்துக்கொண்டு கீழே விழுந்த ஸ்போர்ட்ஸ் கார்!! சம்பவ இடத்திலேயே பலியான இருவர்…

துபாயில் உள்ள அல் கவானிஜில் (Al Khawaneej) அமைந்திருக்கும் எதிஹாத் மால் அருகே உள்ள பாலத்தில் இருந்து அதிவேகமாக வந்த ஸ்போர்ட்ஸ் கார் விழுந்ததில், அதில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாக துபாய் காவல்துறையினர் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் செவ்வாய்கிழமை இரவு 11.55 மணியளவில் நடந்ததாகத் தெரிவித்த துபாய் காவல்துறையின் பொது போக்குவரத்து துறையின் இயக்குனர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி அவர்கள், பலியானவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை அவர் அடையாளம் காணவில்லை என்றும், ஒரு ஆணும் பெண்ணும் பலியாகியிருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அல் மஸ்ரூயி, ஓட்டுநர் அதிவேகத்தில் ஓட்டிச் சென்றதாகவும், கார் பாலத்தின் வளைவை நெருங்கியதும், அது வளைவில் மோதி கான்கிரீட் தடுப்பு பாலத்திலிருந்து கீழே விழுந்ததாகவும் விவரித்துள்ளார்.

கீழே விழுந்த கார் அதீத வேகத்துடன் எதிர்த் திசையில் சென்றிருக்கிறது. அப்போது கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியதாக கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஓட்டுநரும் அவருடன் வந்த ஒரு பெண்ணும் உயிரிழந்தனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, போக்குவரத்து ரோந்துப் பணியாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள், விபத்து நடந்த இடத்தைப் பாதுகாத்துள்ளனர் மற்றும் போக்குவரத்தை சமாளித்து ஆம்புலன்ஸ்கள் மற்றும் மீட்பு வாகனங்களின் வருகையை எளிதாக்கியுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!