அமீரக செய்திகள்

கூகுள் குரோம் பயனர்களுக்கு அமீரகத்தின் சைபர் செக்யூரிட்டி கவுன்சில் வெளியிட்டுள்ள எச்சரிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் சைபர் செக்யூரிட்டி கவுன்சில், மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் குரோம் புதிய அப்டேட்டை வெளியிட்டதைத் தொடர்ந்து, குரோம் பயன்படுத்தும் அமீரகக் குடியிருப்பாளர்கள் தங்கள் ப்ரவுசர்களை புதுப்பிக்குமாறு பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக சைபர் செக்யூரிட்டி கவுன்சில் தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கூகுள் நிறுவனம் குரோம் ப்ரவுசரில் உள்ள பல உயர்-தீவிர பாதிப்புகளை நிவர்த்தி செய்ய செக்யூரிட்டி அப்டேட்களை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த பாதிப்புகள் உள்நுழைந்த பயனரின் பாதிக்கப்பட்டவரின் கணினியில் தீங்கிழைக்கும் குறியீட்டை தொலைவிலிருந்து இயக்க ஹேக்கர்களை அனுமதிக்கலாம் என்றும், இது தரவு திருட்டு, மால்வேர்களை நிறுவுதல் அல்லது பயனரின் ஆள்மாறாட்டம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் என்றும் அதிகாரம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆகவே, கூகுள் குரோம் பயனர்கள் தவறாமல் சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்குமாறு செக்யூரிட்டி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது, மேலும் இது தொடர்பான எந்த தகவலையும் கண்டுபிடிப்புகளையும் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளுமாறும் குடியிருப்பாளர்களைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!