அமீரக செய்திகள்

துபாயில் நடைபெறும் ‘Emirates loves India Day’..!! மெட்ரோ நேரம் நீட்டிப்பு.. இலவச ஷட்டில் பேருந்தும் அறிவிப்பு..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமானது (RTA) நீட்டிக்கப்பட்ட மெட்ரோ இயக்க நேரத்தை அறிவித்துள்ளது. அதன்படி இன்று (நவம்பர் 16, சனிக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் இயக்கத்தை துவங்கிய மெட்ரோ நாளை (நவம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணி வரை தனது இயக்க நேரத்தை நீட்டித்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நீட்டிக்கப்பட்ட நேரங்கள் எமிரேட்ஸ் லவ்ஸ் இந்தியா தின (Emirates Loves India Day) நிகழ்வில் கலந்துகொள்ளும் நபர்களுக்கு இடமளிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள ஜபீல் பூங்காவில் இன்று (நவம்பர் 16) ஒளிகளின் திருவிழாவான ‘தீபாவளி’ கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

சுமார் 40,000 மக்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த கொண்டாட்டங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களின் சிறந்த சாதனைகளை கௌரவிக்கும் சிறப்புப் பிரிவு உட்பட, கலாச்சார, கலை, இசை மற்றும் நாட்டுப்புற செயல்பாடுகளின் தொடர் சிறப்பு நிகழ்வுகள் மூலம் இந்திய கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்திய நாட்டுப்புறவியல், கலாச்சாரம் மற்றும் கலை ஆகியவற்றின் நல்லிணக்கம் மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

குறிப்பாக, பாதுஷா, ஜோனிதா காந்தி மற்றும் இண்டி ராக் இசைக்குழு நடத்தவுள்ள நிகழ்ச்சிகளுடன் இலவச கச்சேரிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. காலை 11 மணிக்குத் தொடங்கும் இந்நிகழ்ச்சி இரவு 11 மணி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நவம்பர் 16, சனிக்கிழமை காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஜபீல் பூங்காவைச் சுற்றி பார்க்கிங் இடங்கள் இருக்கும் என்றும் RTA அறிவித்துள்ளது.

கூடுதலாக, இலவச ஷட்டில் பேருந்துகள் அல் வாஸ்ல் ஃபுட்பால் கிளப்பில் உள்ள பார்க்கிங் பகுதிகளிலிருந்தும், பூம் வில்லேஜில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கும் வெளியேயும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!