அமீரக செய்திகள்

2025ம் ஆண்டை சமூக ஆண்டாக (year of community) அறிவித்த அமீரக அதிபர் ஷேக் முகமது!!

சமீப காலமாக ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் அழைக்கப்பட்டு வருகின்றது. அது போல நடப்பு ஆண்டான 2025ஐ ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது அவர்கள் ‘சமூகத்தின் ஆண்டாக’ (Year of Community) அறிவித்துள்ளார். ‘Hand in Hand’ என்ற முழக்கத்தின் கீழ் நடைபெறும் இந்த தேசிய முயற்சியின் மூலம், சமூகத்தை மேம்படுத்துவதற்கு பங்களிக்குமாறு அமீரக குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனடிப்படையில், 2025ம் ஆண்டு முழுவதும் சமூக ஒத்திசைவை வலுப்படுத்தவும், கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவும், எமிராட்டி மதிப்புகளை நிலைநிறுத்தவும், ஒன்றோடொன்று உறவுகளை வளர்ப்பதற்கும்,  பல நிகழ்வுகள்  நடைபெறும் என்று கூறப்படுகிறது. இது மற்ற தேசிய முன்னுரிமைகளுடன், தொழில் முனைவோர் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்கள் போன்ற துறைகளில் புதுமைகளை வளர்க்கவும் முயல்வதாகக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஷேக் முகமது பதிவிட்ட ஒரு சமூக ஊடக இடுகையில், “கைகோர்த்து சமூக பிணைப்புகளை வலுப்படுத்தவும், பகிரப்பட்ட பொறுப்பை வளர்ப்பதற்கும், நிலையான வளர்ச்சிக்கான திறனைத் திறப்பதற்கும் நாம் பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், அந்த பதிவில், தைரியமான செயலுடன் இணைந்த லட்சிய எண்ணங்களானது தேசம் முன்னேற்றம் மற்றும் செழுமைக்கான ஊக்கமளிக்கும் மாதிரியாக இருப்பதை உறுதிசெய்ய உதவும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் பேசுகையில், சமூக பிணைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் சமூகம் முழுவதும் ஒற்றுமையை வளர்ப்பது போன்ற எதிர்கால முன்னுரிமைகளை எடுத்துக்காட்டுவதாக ‘Year of Community’ பிரகடனத்தை பாராட்டியுள்ளார்.

மேலும், தொடர்ந்து பேசுகையில், ஒரு வலுவான சமூகம் வரவிருக்கும் தலைமுறைகளாக ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறது என்று குறிப்பிட்டதுடன் நாட்டின் வலிமையின் அடித்தளம் தனிநபர்களுக்கிடையேயான தொடர்பு மற்றும் கவனிப்பில் உள்ளது என்பதையும் துபாய் ஆட்சியாளர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த முயற்சியை துணை ஜனாதிபதி, துணைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி நீதிமன்றத்தின் தலைவர் ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் தேசிய திட்டங்களுக்கான ஜனாதிபதி நீதிமன்றத்தின் துணைத் தலைவரான ஷேக்கா மரியம் பின்த் முகமது பின் சையத் அல் நஹ்யானுடன். மேற்பார்வையிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகமானது 2023 இன் கருப்பொருளை நீட்டித்து, 2024 ம் ஆண்டையும் நிலைத்தன்மையின் (year of sustainability) ஆண்டாக அறிவிக்கப்பட்டது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட உறுதியானது “சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு கூட்டுப் பொறுப்பு” என்று அப்போது ஜனாதிபதி ஷேக் முகமது அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!