அமீ்ரகத்தில் பணிபுரியும் இந்தியர்களுக்கு சிறப்பு காப்பீடு..!! 32 திர்ஹம்ஸில் 35,000 திர்ஹம்ஸ் வரை கவரேஜ்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தொழிலாளர்களை ஆதரிப்பதற்கான ஒரு அற்புதமான நடவடிக்கையின் ஒருபகுதியாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட காப்பீட்டுத் திட்டம் இந்திய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காப்பீடு ஆண்டுக்கு 32 திர்ஹம்ஸ் பிரீமியத்திற்கு ப்ளூ காலர் தொழிலாளர்களுக்கு இயற்கையான அல்லது தற்செயலான இறப்பு ஏற்பட்டால் 35,000 திர்ஹம்ஸ் வரை கவரேஜ் வழங்கும் என்றும், உரிமைகோரல்கள் மற்றும் திட்டத்தின் செயல்திறனின் அடிப்படையில் பிரீமியம் மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மலிவு காப்பீட்டுத் தொகுப்பை உருவாக்க துபாயில் உள்ள இந்தியாவின் துணைத் தூதரகம், இந்திய ப்ளூ காலர் தொழிலாளர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் முக்கிய முதலாளிகளான நெக்ஸஸ் காப்பீட்டு தரகர்கள் (Nexus Insurance Brokers) மற்றும் துபாய் தேசிய காப்பீடு (Dubai National Insurance) போன்ற முக்கிய முதலாளிகளுடன் ஒத்துழைக்க முன்முயற்சி எடுத்ததாக புதன்கிழமையன்று துபாயில் இந்தியாவின் தூதரக ஜெனரல் சதீஷ் குமார் சிவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட தகவல்களின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் போது ஏற்படும் உயிரிழப்புகளை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், இது உலகில் எங்கும் இறப்புகளுக்கான கவரேஜை விரிவுபடுத்துகிறது என்றும், கூடுதலாக இந்த காப்பீடு பகுதி மற்றும் முழு உடல் இயலாமைக்கான பாதுகாப்பையும் உள்ளடக்கியது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இது ஒரு முக்கிய அம்சமாக இருக்கும் என்பதுடன், இறந்தவர்களின் உடல்களை திருப்பி அனுப்புவதையும் இந்த காப்பீடு உள்ளடக்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது அவர்களின் அன்புக்குரியவர்களின் இறுதி பிரியாவிடை மற்றும் கடைசியாக பார்க்கக்கூடிய வாய்ப்பையும் அனுமதிக்கிறது. மரணம் எங்கு நிகழ்ந்தாலும் குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் உடலை வீட்டிற்கு கொண்டு வர முடியும் என்பதை இந்த ஆதரவு உறுதி செய்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த இன்சுரன்ஸ் இறந்த நபரின் உடலை கொண்டு செல்வதற்கு 12,000 திர்ஹம்ஸ் வரை வழங்குகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
இத்திட்டம் வெளிநாட்டில் பணிபுரியும் போது பெரும்பாலும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் இந்திய தொழிலாளர்களின் இயற்கை அல்லது தற்செயலான மரணம் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால், தங்கள் குடும்பங்களுக்கு நிதி பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுகாதார காப்பீடு மற்றும் தொழிலாளர்களின் இழப்பீடு மூலம் பல நிறுவனங்கள் வேலை தொடர்பான காயங்கள் மற்றும் இறப்புகளுக்கு காப்பீட்டுத் தொகையை கடந்த ஆண்டு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இது தவிர, எதிர்காலத்தில் காப்பீட்டு வழங்குநர்கள் விரிவாக்கப்பட்ட தொகுப்புகளை அதிக கவரேஜ் தொகைகளுடன் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 50 திர்ஹம்ஸ்க்கு 50,000 திர்ஹம்ஸ், 75 திர்ஹம்ஸ்க்கு 75,000 திர்ஹம்ஸ், மற்றும் ஆண்டுக்கு 100 திர்ஹம்ஸ்க்கு 100,000 திர்ஹம்ஸ் கவரேஜ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel