அமீரக செய்திகள்

துபாய்: ஈத் விடுமுறையில் மட்டும் 6 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள்.. RTA வெளியிட்ட புள்ளிவிபரம்..!!

அமீரகம் முழுவதும் ஈத் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், ​​துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரையிலான ஈத் அல் ஃபித்ர் விடுமுறையின் போது மொத்தம் 6.39 மில்லியன் பயணிகள் அதன் பல்வேறு பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கையை கூறி, புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.

பயணிகளின் புள்ளிவிவரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

  • துபாய் மெட்ரோ: ரெட் மற்றும் க்ரீன் வழித்தடங்களில் 2.428 மில்லியன் பயணிகள்
  • துபாய் டிராம்: 111,130 பயணிகள்
  • பொது பேருந்துகள்: 1.330 மில்லியன் பயணிகள்
  • கடல் போக்குவரத்து: 408,991 பேர்
  • டாக்ஸிகள்: துபாய் டாக்ஸி மற்றும் உரிமையாளர்கள் உட்பட டாக்ஸிகள் 1.687 மில்லியன் பயனர்களுக்கு சேவை செய்தன.
  • பகிரப்பட்ட மொபிலிட்டி சேவைகள் (shared mobility services): இ-ஹெயில் வாகனங்கள், மணிநேர கார் வாடகைகள் மற்றும் ஆன்-டிமான்ட் பஸ் உட்பட 429,616 பயணிகள்

கூடுதலாக, RTA ஆனது, 2026 ஆம் ஆண்டுக்குள் செல்ஃப்-டிரைவிங் டாக்சிகளை அறிமுகப்படுத்தும் திட்டங்களுடன், தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்ப வழங்குநர்களுடன் அதன் கூட்டாண்மைகளை விரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!