இந்தியா-பாகிஸ்தான் போர்: IPL-2025 கிரிக்கெட் காலவரையின்றி நிறுத்தி வைப்பு..!!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் போர் பதட்டங்கள் காரணமாக 2025 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) காலவரையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடத்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் உட்பட தொடர்ச்சியான இராணுவ தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
மே 8 அன்று நடைபெற்றுக்கொண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் (PBSK) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (DC) இடையேயான IPL போட்டி வியாழக்கிழமை இரவு பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான் இந்திய நகரங்கள் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசியதால், விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக 10.1 ஓவர்களுக்குப் பிறகு போட்டி நிறுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டி நடந்துகொண்டிருந்த மைதானம் காலி செய்யப்பட்டது.
மேலும் மைதானத்திற்கு மிக அருகில் உள்ள காங்க்ரா விமான நிலையம் வழக்கமான விமானப் போக்குவரத்துக்கு மூடப்பட்டது. எனவே, வீரர்களை அந்தப் பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையை மதிப்பிட்டு பொருத்தமான நடவடிக்கையை தீர்மானிக்க BCCI இந்திய அரசாங்க அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது வரை, IPL 2025 சீசனின் அடுத்தடுத்த போட்டிகள் நிச்சயமற்றதாகவே உள்ளது, பிளேஆஃப்கள் மற்றும் இறுதிப் போட்டிகள் உட்பட 16 போட்டிகள் இன்னும் விளையாடப்பட உள்ளன. இந்தப் போட்டிகள் மீண்டும் திட்டமிடப்படுமா அல்லது முழுவதுமாக ரத்து செய்யப்படுமா என்பதை BCCI உறுதிப்படுத்தவில்லை.
இது போன்ற முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel