அமீரக செய்திகள்

பொது பள்ளிகளில் கட்டாயப் பாடமாக AIஐ அறிமுகப்படுத்தும் அமீரகம்!!

ஐக்கிய அரபு அமீரகம் அடுத்த கல்வியாண்டு தொடங்கி, மழலையர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை நாட்டில் உள்ள அனைத்து பொதுப் பள்ளிகளிலும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence-AI) கட்டாயப் பாடமாக அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் அமீரகம் பள்ளிக் கல்வியில் AI கல்வியை உட்பொதிக்கும் உலகின் முதல் நாடுகளில் ஒன்றாக மாறும்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் ஞாயிற்றுக்கிழமை X தளத்தில் அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலத்திற்கு மாணவர்களைத் தயார்படுத்துவதற்கான நாட்டின் பரந்த உந்துதலின் ஒரு பகுதியாகும், மேலும் UAE இன் ‘We the UAE 2031’ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது.

இதற்கிடையில், மாணவர்கள் பள்ளி பாடத்திட்டத்தில் AI-ஐ அறிமுகப்படுத்துவது குறித்து ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மாணவர்கள், AI குழு திட்டங்களை எளிதாகவும் தகவலறிந்ததாகவும் மாற்ற முடியும் என்று கூறியுள்ளார்.  “இது எங்களுக்கு ஆராய்ச்சி செய்யவும் பல விஷயங்களை விரைவாக தெரிந்து கொள்ளவும் உதவும்” என்றும் கூறியுள்ளனர்.

மாணவர்களைப் போலவே, அவர்களின் பெற்றோர்களும் இந்த முயற்சியை ஒரு நேர்மறையான படியாகக் கருதுகின்றனர். இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில் “எதிர்கால தலைமுறையினர் AI இன் நன்மைகள் மற்றும் அபாயங்கள் இரண்டையும் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் AI குறித்த ஆரம்பக் கல்வி முக்கியமானது” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இவ்வாறு மாணவர்கள் AI இன் திறனை ஆராய ஆர்வமாக இருந்தாலும், சில பெற்றோர்கள் குழந்தைகளின் AI கல்வி குறித்து கவலை தெரிவிக்கின்றனர். ஒரு சில பெற்றோர்கள், மழலையர் பள்ளி மற்றும் ஆரம்ப தொடக்கப் பள்ளிகள் மோட்டார் திறன்கள் மற்றும் சமூக தொடர்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியதுடன் இந்த புதிய முறையினால் அதிக ஸ்க்ரீன் நேரம் மற்றும் தொழில்நுட்பத்தை அதிகமாக மாணவர்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் இந்தப் புதிய முயற்சியின் கீழ், பொதுப் பள்ளிகளில் கற்றலின் ஒவ்வொரு கட்டமும் மாணவர்களின் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்றவாறு சிந்தனையுடன் வடிவமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் முதல் படைப்பாற்றலை வளர்ப்பது வரை கல்வியில் AI பெரும் ஆற்றலைக் கொண்டிருந்தாலும், அதன் அறிமுகம் மனித தொடர்பு, பாதுகாப்பு மற்றும் வயதுக்கு ஏற்ற முறைகளுடன் சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதை பெற்றோர்களும் கல்வியாளர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!