ADVERTISEMENT

துபாயில் 2026–27 கல்வியாண்டுக்கான தனியார் பள்ளிக் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? விளக்கமளித்துள்ள ஆணையம்!!

Published: 23 May 2026, 5:35 PM |
Updated: 23 May 2026, 5:35 PM |
Posted By: Menaka

துபாயின் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) எமிரேட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 2026–27 கல்வியாண்டுக்கான கட்டணம் மாறாமல் இருக்கும் என்று துபாய் தலைமையின் உத்தரவுகளைத் தொடர்ந்து உறுதி செய்துள்ளது.

ADVERTISEMENT

துபாயின் பட்டத்து இளவரசரும், துபாய் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த முடிவு வெளியிடப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.

துபாயின் வளர்ந்து வரும் தனியார் கல்வித் துறையில் குடும்பங்களை ஆதரிப்பது, மலிவு விலையை பராமரிப்பது மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது போன்றவற்றை இந்த நடவடிக்கையின் நோக்கமாக கொண்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

1.5 திர்ஹம்ஸ் பில்லியன் பொருளாதார ஆதரவு தொகுப்பின் ஒரு பகுதி

துபாயின் 1.5 பில்லியன் திர்ஹம் மதிப்புள்ள இரண்டாவது பொருளாதார ஊக்கத்தொகை தொகுப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை அடுத்து, பள்ளிக் கட்டண உயர்வு நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், முந்தைய ஆதரவு நடவடிக்கைகளுடன் இணைந்து, சமீபத்திய பொருளாதார ஆதரவு முயற்சிகளின் மொத்த மதிப்பு இப்போது 2.5 பில்லியன் திர்ஹம்களை எட்டியுள்ளது.

ADVERTISEMENT

இந்த தொகுப்பில் 33 முன்முயற்சிகள் அடங்கும், அவை அடுத்த மூன்று முதல் 12 மாதங்களில் கல்வி உட்பட பல துறைகளில் செயல்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel