இந்தியாவைச் சேர்ந்த அல்ஹிந்த் குழுமம், ஒரு மாபெரும் ஆள்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் 300-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, மே 3, ஞாயிற்றுக்கிழமை அன்று ஷார்ஜாவின் அல் கான் பகுதியில் உள்ள அல்ஹிந்த் டவரில் காலை 9 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நேரடி நேர்காணல்கள் நடைபெறும் என்பது தெரிய வந்துள்ளது.
புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான பணியிடங்கள்
- சமர்ப்பிப்பு அதிகாரிகள் ( Submission officers)
- கவுண்டர் பணியாளர்கள் (புதிய பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்)
- மூத்த மேலாளர்கள்
- கிளைத் தலைவர்கள்
- செயல்பாட்டு மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்
தொடக்க நிலை பணியிடங்கள் புதிதாக வேலை பார்க்கவிருக்கும் நபர்களுக்கு திறந்திருக்கும் அதே வேளையில், மூத்த பதவிகளுக்கு தூதரக சேவைகளில் பின்னணி கொண்ட அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் கொண்டு வர வேண்டியவை:
- புதுப்பிக்கப்பட்ட சுயவிவரக் குறிப்பு (CV)
- பாஸ்போர்ட்நகல்
- ரெசிடென்ஸி விசா நகல்
- கல்விச் சான்றிதழ்கள்
இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்திற்குஅதிக எண்ணிக்கையிலானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் 16 இடங்களில் ஆள்சேர்ப்பு
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகங்களுக்கான பாஸ்போர்ட், விசா மற்றும் தூதரக சேவைகளைக் கையாள்வதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தை அல்ஹிந்த் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெற்றதைத் தொடர்ந்து இந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிறுவனம் ஏழு எமிரேட்களிலும் 16க்கும் மேற்பட்ட அலுவலகங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது, மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேவைகளின் அடிப்படையில் நாட்டின் எந்தப் பகுதியிலும் பணியமர்த்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை முதல் சேவைகள் தொடங்கும்
அல்ஹிந்த் நிறுவனம் ஜூலை 1 முதல் தனது செயல்பாடுகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது பின்வரும் சேவைகளை வழங்கும்:
- பாஸ்போர்ட் மற்றும் விசா செயலாக்கம்
- OCI கார்டு சேவைகள்
- காவல்துறை அனுமதிச் சான்றிதழ்கள் (PCC)
- சரணடைதல் சான்றிதழ்கள்
- உலகளாவிய நுழைவுத் திட்ட (Global Entry Programme -GEP) சரிபார்ப்பு
- அப்போஸ்டில் மற்றும் சான்றளிப்பு சேவைகள்
மேலும், பயனர்களுக்குக் கட்டணங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில், தூதரகக் கட்டணங்களுக்குக் கூடுதலாக 19 திர்ஹம்ஸ் என்ற ஒருங்கிணைந்த சேவைக் கட்டணத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கை, அதன் வரவிருக்கும் செயல்பாடுகளின் அளவையும், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் தூதரக சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவையையும் பிரதிபலிக்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel