ADVERTISEMENT

80-வது இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடத் தயாராகும் துபாய்: இசை, உணவு மற்றும் குடும்பக் கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களின் விபரம் வெளியீடு!!

Published: 12 Aug 2026, 5:32 PM |
Updated: 12 Aug 2026, 5:38 PM |
Posted By: Menaka

இலட்சக்கணக்கான இந்தியர்கள் வசிக்கும் துபாய் நகரம், ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை, நகரம் முழுவதும் கலாச்சார நிகழ்ச்சிகள், சிறப்பு உணவு அனுபவங்கள் மற்றும் குடும்ப செயல்பாடுகளுடன் கொண்டாடத் தயாராகி வருகிறது. பாரம்பரிய இந்திய உணவுகள் முதல் தங்கும் விடுதிச் சலுகைகள் வரை, எமிரேட்டில் உள்ள பல இடங்கள் இந்த விழாவிற்காக சிறப்பு நிகழ்வுகளைத் திட்டமிட்டுள்ளன.

ADVERTISEMENT

மூன்று நாட்கள் இந்திய இசை மற்றும் கதைசொல்லல்

இசை மற்றும் கலாச்சார ஆர்வலர்கள், ஆகஸ்ட் 14 முதல் 16 வரை நடைபெறும் மூன்று நாள் கொண்டாட்டமான “Chitthi Aayi Hai – Echoes ” நிகழ்ச்சிக்காக அல் கூஸில் உள்ள தி ஜங்ஷனுக்குச் செல்லலாம்.

தேதி: ஆகஸ்ட் 14-16
டிக்கெட்டுகள்: டிஸ்ட்ரிக்ட் மற்றும் பிளாட்டினம்லிஸ்ட் மூலம் கிடைக்கும்

ADVERTISEMENT

குடும்ப சுதந்திர தின ஸ்டேகேஷன்

கொண்டாட்டங்களை நீட்டிக்க விரும்பும் குடும்பங்கள் லெகோலேண்ட் ஹோட்டல் துபாயில் (LEGOLAND Hotel Dubai) தங்கலாம்.

இந்த ஹோட்டல், இந்திய மற்றும் பாகிஸ்தானிய குடும்பங்களுக்கு அதன் ‘Kids Go Free’ என்ற சலுகையையும், ஹோட்டல் தங்குதலுக்கு கூடுதலாக 10 சதவீத தள்ளுபடியையும் வழங்குகிறது.

ADVERTISEMENT

குறிப்பாக, விருந்தினர்கள் செக்-இன் செய்யும் போது தங்கள் குடியுரிமைக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘LEGO’ கருப்பொருளைக் கொண்ட இந்த ஹோட்டல், அறைக்குள் புதையல் வேட்டை, விளையாட்டுப் பகுதிகள், கதாபாத்திரங்களின் வருகை, இரவு நேரப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் நீச்சல் குளத்தைப் பயன்படுத்தும் வசதி உள்ளிட்ட செயல்பாடுகளை வழங்குகிறது.

முன்பதிவு காலம்: ஆகஸ்ட் 30 வரை
தங்கும் காலம்: செப்டம்பர் 30 வரை
சலுகை: குழந்தைகளுக்கு அனுமதி இலவசம் + கூடுதலாக 10% தள்ளுபடி
இடம்: லெகோலேண்ட் ஹோட்டல் துபாய்

துபாய் க்ரீக் வழங்கும் இந்திய சுதந்திர தின பிரஞ்ச் (brunch)

உணவுப் பிரியர்கள், ஆகஸ்ட் 15 அன்று ரேடிசன் ப்ளூ ஹோட்டல் துபாய் தேரா க்ரீக்கில் உள்ள கிரீன்ஹவுஸ் சோஷியலில் ஒரு சிறப்பு இந்திய சுதந்திர தின பிரஞ்ச் விருந்தை நடத்தி கொண்டாடலாம்.

மேலும், குழந்தைகள் முகத்தில் வண்ணம் தீட்டுதல் மற்றும் பலூன் விளையாட்டு போன்றவற்றை ரசிக்கலாம், அதே நேரத்தில் குடும்பங்கள் சிறந்த உடை அணிந்தவர்களுக்கான போட்டியில் பங்கேற்கலாம். வெற்றி பெறும் குடும்பத்திற்கு நான்கு பேருக்கான பிரஞ்ச் வவுச்சர் பரிசாக வழங்கப்படும்.

அதுமட்டுமின்றி, உறுதிசெய்யப்பட்ட பிரஞ்ச் முன்பதிவுகள் தனிஷ்க் நகை வவுச்சர்களுக்கான குலுக்கலிலும் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேதி: ஆகஸ்ட் 15
விலை: ஒரு நபருக்கு 199 திர்ஹம்ஸ்
இடம்: கிரீன்ஹவுஸ் சோஷியல், ரேடிசன் ப்ளூ ஹோட்டல் துபாய் தேரா க்ரீக்

சுதந்திர தின பஃபே

இதேபோல், குறைந்த செலவில் கொண்டாட்டத்தை விரும்புவோர், பர் துபாய் அல்லது ஷேக் சையத் சாலையில் உள்ள புராணி தில்லியின் உணவகங்களுக்குச் செல்லலாம்.

இந்த உணவகங்கள் ஆகஸ்ட் 15 அன்று, பிரபலமான இந்திய உணவுகள் மற்றும் இந்தியக் கொடியின் வண்ணங்களால் ஈர்க்கப்பட்ட உணவுகளைக் கொண்ட ஒரு சிறப்பு சுதந்திர தின பஃபேவை வழங்கவிருக்கின்றன.

கூடுதலாக, மாலை நேரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நேரடி தேசபக்தி இசையும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேதி: ஆகஸ்ட் 15
நேரம்: பர் துபாயில் இரவு 7 மணி முதல் 11.30 மணி வரை; ஷேக் சையத் சாலையில் மாலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை
விலை: ஒரு நபருக்கு 80 திர்ஹம்ஸ்
இடம்: புராணி தில்லி, பர் துபாய்; ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஷேக் சையத் ரோட்டில் உள்ள புராணி தில்லி

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel