சவூதி அரேபியாவில் ரமலான் பிறை பார்க்கப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது அமீரகத்திலும் பிறை பார்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை ஐக்கிய அரபு அமீரகத்தில் காணப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எனவே, இன்று, ஏப்ரல் 1, ஷஃபான் மாதத்தின் கடைசி நாளாக இருக்கும் என்றும் மேலும் ரமலான் மாதம் ஏப்ரல் 2 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்ரிப் தொழுகைக்கு பிறகு பிறை பார்க்கும் குழு கூடி ரமலான் மாதத்திற்கான பிறையை பார்த்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே சவூதியில் பிறை பார்க்கப்பட்டால் அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் போன்ற நாடுகளும் சவூதியையே பின்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.