ஐக்கிய அரபு அமீரகத்தில் பல நாட்களாக குறைந்த எண்ணிக்கையில் கொரோனா தொற்று பதிவாகி வந்த நிலையில் தற்பொழுது தொடர்ந்து இரண்டாவது நாளாக 400 க்கும் மேல் நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை, மே 28, 2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த ஒரு நாளில் மட்டும் 430 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 907,069 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு எவரும் பலியாகவில்லை. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் 2,302 ஆக இருக்கின்றது.
கடந்த ஒரு நாளில் மட்டும் 385 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 890,696 கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.