உலகளவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், அது உச்சம் அடைவதற்கு முன்னரே கார்டுகளில் உச்சம் தொட்டுள்ளன. இதனால் மத்திய வங்கிகளைப் போலவே நிறுவனங்களும் பாதிப்பைக் குறைக்க அவசர நடவடிக்கைகளை எடுக்க நடவடிக்கிய எடுத்து வருகின்றன.
ஒரு கணக்கெடுப்பின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 74 சதவீத நிறுவனங்கள் கொரோனா தொற்றுநோய்க்குப் பின் தொழிலாளர் சந்தையின் அழுத்தத்தை உணர்கிறது, முன்பு வழங்கப்பட்ட சம்பளங்கள் திறமையான ஊழியர்களுக்கு குறைவு என்பதை அந்த கணக்கெடுப்பின் மூலம் நிரூபிக்கின்றன.
“தற்போதைய சூழலில் எதிர்கொள்ள போகும் சவால்களை சிறப்பாக எதிர்கொள்வதற்கும், புதிய திறமைகளை ஈர்க்கவும், நிறுவனங்களில் உள்ள தற்போதைய பணியாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும், பணியாளர்களின் சம்பளத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது” என்று தரவுகளின் மத்திய கிழக்கு தலைவர் ராபர்ட் ரிக்டர் கூறினார்.
வருடாந்திர ஊதியத்தை மறுஆய்வு செய்த நிறுவனங்கள் 49 சதவீதத்திற்கும் அதிக சம்பளத்திற்காக பட்ஜெட் போடுவதாக கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. 14 சதவீத நிறுவனங்கள் மத்திய ஆண்டு ஊதிய மதிப்பாய்வுகள் குறித்து திட்டடுகிறது. இவர்களில், 21 சதவீதம் பேர் 5-8 சதவீத உயர்வை எதிர்பார்க்கின்றனர், அதே சமயம் 24 சதவீதம் பேர் 9 சதவீதத்துக்கும் அதிகமான உயர்வை எதிர்பார்கின்றன. பெரும்பான்மையான 42 சதவீத நிறுவனங்கள் 2022ல் 5-6 சதவீத உயர்வை எதிர்பார்க்கின்றன. 2023ல், 35 சதவீத நிறுவனங்கள் ஊதியத்தில் 2-4 சதவீத உயர்வை எதிர்பார்க்கின்றன.
சராசரியாக, ஜூனியர் மற்றும் மிடில் மேனேஜ்மென்ட் உயர் தலைமைத்துவத்துடன் ஒப்பிடும்போது அதிக சம்பள உயர்வு வழங்க பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்களை தக்கவைத்துக்கொள்ளவே சம்பள மதிப்பாய்வை நடத்தப்பட்டதாக நிறுவனங்கள் கூறுகின்றன. சந்தை விகிதத்தை விட குறைவாக சம்பளம் இருப்பதால் சம்பள உயர்வு அவசியம் என்று 15 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன, அதே சமயம் 23 சதவீத நிறுவனங்கள் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்றவாறு உயர்வு முக்கியம் என்று கூறியுள்ளனர்.
“தொழில்களின் வரிசையிலிருந்து முதலாளிகளுக்கு அவர்களின் வணிகத்தைப் பாதுகாக்கவும் வளரவும் சிறந்த முடிவுகளை எடுப்பதற்குத் தேவையான தெளிவையும் நம்பிக்கையையும் வழங்கும் ஆலோசனைகளையும் தீர்வுகளையும் வழங்க இந்தத் தரவு நுண்ணறிவுகளைப் பயன்படுத்துகிறோம்” என்று ரிக்டர் கூறினார்.