ஐக்கிய அரபு அமீரக அரசு நாளை ஈத்–அல்–அதா பெருநாளுக்காக கோவிட்-19 பாதுகாப்புக்காக புதிய கட்டுப்பாடுகளை தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையமான (NCEMA) அறிவித்துள்ளது. அதில் வழிபாட்டாளர்கள் அதிகாலை ஈத் அல் அதா தொழுகைக்கு வரும்போது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அபுதாபி ஷேக் ஜயீத் கிராண்ட் மசூதியிலும் அல் அய்ன் ஷேக் கலீஃபா கிராண்ட் மசூதியிலும் ஈத் தொழுகைகள் காலை 7:00 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமீரகத்தில் உள்ள எமிரேட்டுகளில் ஈத் அல் அதா தொழுகைக்கான நேரங்கள் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.