ADVERTISEMENT

அவசரகால சூழ்நிலையில் மொபைல் ஃபோன்களில் முன்னெச்சரிக்கை வழங்குவதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவு..!! ஓமான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!!

Published: 18 May 2023, 9:14 PM |
Updated: 19 May 2023, 1:38 PM |
Posted By: Menaka

ஓமானின் மஸ்கட் கவர்னரேட்டில் உள்ள தொலைத்தொடர்பு சந்தாதாரர்களுக்கு மொபைல் போன்கள் மூலம் முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கும் வகையில் அனுப்பப்படும் சேவையின் (early warning broadcast service)  சோதனை ஓட்டம் கடந்த மே 16, 2023 செவ்வாய்க் கிழமையன்று தொடங்கியதாக ஓமான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecommunications Regulatory Authority – TRA) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக இந்த எச்சரிக்கை அமைப்பு, சூறாவளி, சுனாமி, கனமழை, பலத்த காற்று போன்ற இயற்கைப் பேரிடர்கள் பற்றியும், தீ அல்லது வாயு கசிவு போன்ற தொழில்துறை பேரழிவுகள் பற்றியும் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக TRA இன் தொழில்நுட்ப வல்லுனரான இப்ராஹிம் பின் ஹம்தான் அல் மவாலி கூறியுள்ளார்.

ஓமானில் TRA நிபுணர் இது குறித்து தெரிவிக்கையில், இந்த அமைப்பை ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாக மட்டும் பயன்படுத்த முடியாது, ஆனால் அவசரகால சூழ்நிலைகளில் எவ்வாறு பதிலளிப்பது மற்றும் வதந்திகளை அகற்றுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், ஒரு பகுதியில் அவசரகால சூழ்நிலையின் போது, ​​ஆபத்தில் உள்ள பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் விரைவாக தப்பிக்க திட்டமிடுவதற்கான எச்சரிக்கை செய்தியை இதன் மூலம் பெறலாம் எனவும் கூறியுள்ளார். இத்தகைய சூழ்நிலைகளில் எதிர்கொள்ளும் சவால்களை சோதித்து அவற்றைத் தீர்ப்பதே செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட சோதனை ஓட்டம் என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

இந்த சேவையில், பதிவு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட அவசர நிலை (சூறாவளி, சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர் மற்றும் தீ அல்லது வாயு கசிவு போன்ற தொழில்துறை பேரழிவுகள்) குறித்த எச்சரிக்கை செய்தியை மொபைலில் தானாகவே தோன்றும் வகையில் தனிப்பயனாக்கப்பட்ட சிறப்பு டோன்களுடன் ஒளிபரப்புவதும் அடங்கும் என்று கூறப்படுகிறது. தற்போது, ​​இந்த சோதனையில் Ooredoo மற்றும் Omantel சந்தாதாரர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள் என்று ஆணையம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், மஸ்கட்டில் உள்ள பல சந்தாதாரர்கள் கடந்த மே 16 அன்று தங்கள் மொபைலில் ‘அவசர எச்சரிக்கை ஒளிபரப்புக்கான’ சோதனைச் செய்திகளைப் பெற்றதாகத் தெரிவித்துள்ளனர். ஒளிபரப்பைப் பெறாதவர்கள் https://eqp.datamining.om/estebyan/EarlyWarningBroadcast லிங்க் மூலம் பதிவு செய்யுமாறு TRA கேட்டுக்கொண்டுள்ளது.

முதலாவதாக, சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாக, மஸ்கட் கவர்னரேட்டில் மட்டும் ஆயிரக்கணக்கான மொபைல் போன்களில் ஒலித்த அவசர எச்சரிக்கை, பின்னர் மெதுவாக நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, அரபு, ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது ஆகிய நான்கு மொழிகளில் மக்கள் முன் எச்சரிக்கை அமைப்பு செய்திகளைப் பெற்ற நிலையில், மேலும் கூடுதலாக மொழிகளைச் சேர்ப்பதற்கான திட்டங்கள் உள்ளன என்றும் இதற்காக பயன்பாட்டாளர்கள் தங்கள் மொபைல் அமைப்புகளை அப்டேட் செய்ய வேண்டியிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.