ADVERTISEMENT

UAE: தொழிலாளர்களின் பணி ஒப்பந்தங்களை ‘fixed term contract’-ஆக மாற்றுவது கட்டாயம்..!! அமைச்சகம் வலியுறுத்தல்..!!

Published: 9 Aug 2023, 7:47 AM |
Updated: 9 Aug 2023, 9:08 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (Mohre) முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான வேலை ஒப்பந்தங்களில் நிலையான கால அளவைக் (fixed-term contracts) குறிப்பிடுமாறு வலியுறுத்தும் புதிய தொழிலாளர் சட்டம் குறித்து ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

புதிய அமீரக தொழிலாளர் சட்டத்தின் படி, நாட்டில் உள்ள அனைத்து தனியார் துறை முதலாளிகளும் தங்கள் ஊழியர்களின் வரம்பற்ற பணிக்கால ஒப்பந்தங்களை நிலையான கால ஒப்பந்தங்களாக (unlimited contracts to fixed-term contracts) மாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான வேலை ஒப்பந்தங்களில் இருதரப்பினருக்கும் இடையேயான வேலைவாய்ப்பு உறவுக்கான சரியான கால அளவைக் குறிப்பிடவில்லை என்பதை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது அவர்களின் தேவைகளுக்கு ஏற்ற விதிமுறைகளை பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கிறது.

ADVERTISEMENT

எனவே, இத்தகைய வேலை ஒப்பந்தங்களை நிறுவனங்கள் மாற்றுவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31, 2023 வரை அரசாங்கம் நீட்டித்துள்ளது.

அதேசமயம், புதுப்பிக்கப்படக்கூடிய பணி அனுமதியின் வகையைப் பொறுத்து, காலாவதியாகும் போது முதலாளிகள் பணி அனுமதியைப் புதுப்பிக்க வேண்டும், மேலும் தற்போதுள்ள ஒப்பந்தம் செல்லுபடியாகும் மற்றும் மாறாமல் இருந்தால் புதிய வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை அச்சிட வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, புதிய தொழிலாளர் சட்டத்தில் உள்ள நிர்வாக விதிமுறைகள் நாட்டிலுள்ள அனைத்து தனியார் துறை நிறுவனங்களிலும் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் வேலைவாய்ப்பை ஒழுங்குபடுத்தும் 12 வகையான வேலை அனுமதிகளை வரையறுக்கிறது. மேலும், புதுப்பிக்கப்பட்ட தொழிலாளர் சட்டம் ஒன்பது குறிப்பிட்ட சூழ்நிலைகளை அமைக்கிறது, அதன் கீழ் ஒரு வேலை ஒப்பந்தம் நிறுத்தப்படலாம்.

இவற்றில் பரஸ்பர ஒப்பந்தம், குறிப்பிட்ட ஒப்பந்த காலத்தை புதுப்பிக்காமல் முடித்தல், இரு தரப்பினரின் வேண்டுகோளின் பேரில் பணிநீக்கம், ஒரு தொழிலாளியின் மரணம் மற்றும் நிரந்தர இயலாமை அல்லது சிறைத்தண்டனை ஆகியவை அடங்கும்.

அத்துடன் மற்றொரு முக்கியமான மேம்பாட்டில், அநியாயமான பணிநீக்கங்கள் பற்றிய கவலைகளை அமைச்சகம் நிவர்த்தி செய்துள்ளது. புதிய விதிமுறைகளின் படி, ஒரு தொழிலாளி அமைச்சகத்திடம் தீவிரமான புகாரைப் பதிவு செய்தாலோ அல்லது முதலாளிக்கு எதிராக வழக்குத் தொடுத்தாலோ அது உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், ஊழியரின் பணிநீக்கம் நியாயமற்றதாக கருதப்படும்.

ஆகவே, முதலாளிகள் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வேலையின் வகை, சேதத்தின் அளவு மற்றும் சேவையின் காலம் ஆகியவற்றின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும்.

அதேசமயம், தொழிளார்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது, கடைசியாகப் பெற்ற சம்பளத்தின் அடிப்படையில் மூன்று மாத காலத்திற்கு தொழிலாளியின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.