ADVERTISEMENT

ஓமானில் வெளுத்து வாங்கும் கனமழை: பள்ளி, அலுவலகங்கள் மூடல்.. பேருந்து சேவை நிறுத்தம்.. பொதுமக்கள் தங்க முகாம்கள் ஏற்பாடு..!!

Published: 12 Feb 2024, 9:18 PM |
Updated: 12 Feb 2024, 9:19 PM |
Posted By: Menaka

ஓமானில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலையை கருத்தில்கொண்டு, சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆணையம் (CDAA) குடியிருப்பாளர்களை வீட்டிலேயே இருக்குமாறும், அவசரத் தேவைகளைத் தவிர வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளதாக ஓமன் செய்தி நிறுவனம் (ONA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது தளங்களைப் பாதுகாப்பதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், வழிகாட்டுதலை வழங்குவதற்கும் அதன் பல்வேறு துறைகளில் மீட்புக் குழுக்கள் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்துகிறது.

மேலும், நாடு முழுவதும் கனமழை பெய்து சீரற்ற வானிலை நிலவி வரும் நிலையில், தோஃபர் மற்றும் அல் வுஸ்தா கவர்னரேட்டுகள் தவிர, அனைத்து கவர்னரேட்டுகளிலும் உள்ள மாநில நிர்வாக எந்திரத்தின் அலகுகள் மற்றும் பிற சட்ட நபர்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு இன்று (திங்கள்கிழமை) அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம், குடியிருப்பாளர்களின் நலனை கருத்தில்கொண்டு, தோஃபர் மற்றும் அல் வுஸ்தாவில் உள்ள பள்ளிகளைத் தவிர அனைத்து அரசு, தனியார் மற்றும் சர்வதேச பள்ளிகள் உட்பட கல்வி நிறுவனங்களுக்கும் அதிகாரிகள் விடுமுறையை அறிவித்துள்ளனர்.

அத்துடன் கனமழை காரணமாக, தற்சமயம் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓமானில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக ஓமானின் தேசிய அவசரகால மேலாண்மைக் குழு (NCEM) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பலத்த மழை காரணமாக சஹாம் மற்றும் சோஹாரின் விலாயட்ஸ்க்கும் (Wilayats of Saham and Sohar), ஷினாஸின் விலாயத்தில் (Wilayat of Shinas) இரண்டாம் நிலை சாலைகளுக்கும் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

தொடர்ச்சியாக இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால் இப்பகுதிகளில் உள்ள பள்ளத்தாக்குகள் நிரம்பி வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதாகவும், இதன் விளைவாக இந்த இரண்டு விலயாத்துகளுக்கு இடையே போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் ஓமனின் தேசிய போக்குவரத்து நிறுவனமும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கனமழைக்கு மத்தியில் பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், மஸ்கட் கவர்னரேட்டில் திங்கட்கிழமை அன்று (பிப்ரவரி 12) நிறுவனத்தின் அனைத்து பேருந்து மற்றும் ஃபெர்ரி சேவைகளை நிறுத்துவதாக “Mwasalat” அறிவித்துள்ளது.

பேருந்து சேவை:

  • மஸ்கட்டில் அனைத்து நகர சேவைகளும் நிறுத்தம்.
  • சலாலாவில் நகர சேவையின் தொடர்ச்சி.
  • அனைத்து கவர்னரேட்களிலும் நகரங்களுக்கு இடையேயான சேவைகள் தொடர்வது.

ஃபெர்ரி சேவை

  • முசந்தம் கவர்னரேட்டிற்குச் செல்லும் மற்றும் செல்லும் அனைத்து வழித்தடங்களின் தொடர்ச்சி
  • பாதையில் செயல்பாடுகளின் தொடர்ச்சி (ஷன்னா – மசிரா)
  • பாதையில் செயல்பாடுகளின் தொடர்ச்சி (ஹலானியத் – தக்கா)

இதனிடையே, பயண அட்டவணையில் மாற்றங்கள் அல்லது சேவைகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது தொடர்பான எந்த புதுப்பிப்புகளும் Mwasalat இன் சமூக ஊடக சேனல்கள் மூலம் உடனடியாக வெளியிடப்படும். கூடுதல் தகவல்களுக்கு குடியிருப்பாளர்கள் 1551ஐத் தொடர்பு கொள்ளலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஓமனின் நிவாரண மற்றும் தங்குமிடம் துறையானது (Relief and Shelter Sector), அல் புரைமி கவர்னரேட்டில் உள்ள ஹஃப்சா பின்ட் சிரின் பள்ளியில் 250 நபர்கள் தங்கக்கூடிய தங்குமிடம் மையம் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளது. பொதுமக்கள் 25645634 என்ற எண்ணில் தொடர்பு எண்ணை செயல்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

வடக்கு அல் பதினாவில் திறக்கப்பட்டுள்ள தங்குமிடங்கள்:

வடக்கு அல் பதினா கவர்னரேட்டில் உள்ள அவசரகால சூழ்நிலை மேலாண்மைக்கான துணைக் குழு, ஆண்களுக்கான சோஹார் மேல்நிலைப் பள்ளிகளிலும், சோஹர் விலாயத்தில் உள்ள பெண்களுக்கான அகமது பின் சயீத், சஹாம், துரத் அல் விலாயத்தில் உள்ள யாரூப் பின் பலராப் மேல்நிலைப் பள்ளிகளிலும், துரத் அல்-இல்ம், அல்-ரய்யான் மற்றும் அல்-கபூராவின் விலாயத்தில் உள்ள அல்-ஹவாரி பின் மாலிக், பெண்களுக்கான ஷினாஸ் மேல்நிலைப் பள்ளி மற்றும் லிவாவில் உள்ள அல் பாடினா பள்ளி, மற்றும் அல்-யர்மூக், அல்-அஹ்னாஃப் மற்றும் ஹிந்த் பின்த் அம்ர் பள்ளிகள் சுவைக் விலாயத் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் தங்குமிடங்களை செயல்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel