ADVERTISEMENT

துபாய்: எமிரேட்ஸ் இஸ்லாமிக் பேங்க்கின் 5 கிளைகளை மூட உள்ளதாக அறிக்கை!!

Published: 22 Nov 2025, 1:41 PM |
Updated: 22 Nov 2025, 1:41 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்னணி வங்கியாக செயல்பட்டு வரும் எமிரேட்ஸ் இஸ்லாமிக் பேங்க் தனது குறிப்பிட்ட கிளைகளை மூட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமீரகத்தில் டிஜிட்டல் வங்கி பயன்பாடு தொடர்ந்து வளர்ந்து வருவதால், எமிரேட்ஸ் இஸ்லாமிக் பேங்க் நாடு முழுவதும் அதன் கிளை நெட்வொர்க்கை நெறிப்படுத்துகிறது என்றும் இதன் விளைவாக இந்த முடிவு மேற்கொள்ளப்படுவதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

ADVERTISEMENT

இது குறித்து எமிரேட்ஸ் இஸ்லாமிக் பேங்கின் துணை தலைமை நிர்வாக அதிகாரி முகமது கம்ரான் வாஜித் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் வங்கி ஏற்கனவே அதன் நெட்வொர்க்கை 45 கிளைகளாக குறைத்துள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் ஐந்து கிளைகளை மூடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், அந்த கிளைகள் முற்றிலுமாக அகற்றப்படாது என்றும், ஆனால் மூடுவதால் ஏற்படும் சேமிப்பை தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் வாடிக்கையாளர் சேவைகளுக்கு மறு ஒதுக்கீடு செய்யப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், இந்த மறுசீரமைப்பு ஊழியர்களின் வேலைகளை பாதிக்காது என்று வாஜித் தெளிவுபடுத்தியுள்ளார்.
“திறமைகளைத் தக்கவைத்துக்கொள்வதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சில கிளைகளை நாங்கள் மூடினாலும், திறமை எப்போதும் வரவேற்கப்படுகிறது மற்றும் தக்கவைக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

எமிரேட்ஸ் இஸ்லாமிக் பேங்க் மற்றும் எமிரேட்ஸ் NBD இணைந்து 30,000 க்கும் மேற்பட்ட மக்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன, இது அவர்களை அமீரகத்தின் நிதித் துறையில் மிகப்பெரிய முதலாளியாக ஆக்குகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எமிரேட்ஸ் இஸ்லாமிக் பேங்க் என்பது துபாய் எமிரேட்டில் உள்ள மிகப்பெரிய வங்கியான எமிரேட்ஸ் NBD வங்கியின் துணை நிறுவனமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel