ADVERTISEMENT

3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற துபாய் ரன் நிகழ்வு.. மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த ஷேக் சையத் சாலை..

Published: 23 Nov 2025, 5:43 PM |
Updated: 23 Nov 2025, 5:43 PM |
Posted By: Menaka

அமீரகவாசிகளால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துபாய் ரன்னின் ஏழாவது பதிப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்ற நிலையில், சுமார் 307,000 க்கும் மேற்பட்ட மக்கள் மாபெரும் நிகழ்வில் ஆவலுடன் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது நகரத்தின் மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலையான ஷேக் சையத் சாலையை விடியற்காலையில் வாகனம் எதுவுமின்றி பொதுமக்கள் மட்டுமே ஓடுவதற்கு பயன்படுத்தும் பாதையாக மாற்றியது. ஸ்ட்ரோலர்களில் உள்ள குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைத்து வயதினரும் உற்சாகத்துடன் இதில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

காலை 6:30 க்குப் பிறகு இந்த நிகழ்வு தொடங்கியது, துபாய் காவல்துறை சூப்பர் கார்கள் மற்றும் தலாபத் ரைடர்ஸ் ஆகியோரின் அணிவகுப்புடன், வண்ணமயமான வான்வழி ஸ்டண்ட் பாராமோட்டார்ஸ், டிரம்மர்கள் மற்றும் ஸ்டில்ட் வாக்கர்ஸ் ஆகியவை பாதையில் பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. துபாய் பிட்னஸ் சேலஞ்சின் உள்ளடக்கிய உணர்வை அடையாளப்படுத்தும் வகையில், குடும்பங்கள், நண்பர்கள், கார்ப்பரேட் அணிகள், அனுபவம் வாய்ந்த ஓட்டப்பந்தய வீரர்கள் என அனைவரும் உற்சாகமாக பங்கேற்றது சிறப்பிற்குரியது.

குறிப்பாக, நான்கு மாத குழந்தையான கென் ராவன், தனது பெற்றோருடன் சேர்ந்து, தனது முதல் துபாய் ரன் போட்டியின் போது தனது ஸ்ட்ரோலரில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தார். இதேபோல் பல குழந்தைகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றதாக கூறப்படுகின்றது. பல பெற்றோர்கள் இந்த அனுபவத்தை சிறப்பு நினைவு என்று விவரித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த நிகழ்வில் பங்கேற்பாளர்கள் இரண்டு பிரபலமான பாதைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர்:

  • 5 கி.மீ பாதை: முகமது பின் ரஷீத் பவுல்வர்டு வழியாக துபாய் மாலில் முடிகிறது.
  • 10 கி.மீ பாதை: துபாய் கேனல் பாலம் முழுவதும் நீண்டு, DIFC கேட் அருகே முடிவடையும் ஒரு நீண்ட பாதை.

இரண்டு பாதைகளும் துபாயின் முக்கிய அடையாளங்களாக சூழப்பட்ட ஷேக் சையத் சாலையில் சுதந்திரமாக நடக்க அல்லது ஓட அரிய வாய்ப்புகளை வழங்கின. சிலர் சரியான நேரத்தில் நிகழ்வுக்கு வருவதற்காக அதிகாலை 2 மணிக்கே தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அத்துடன் அபுதாபி, ஷார்ஜா மற்றும் பிற எமிரேட்ஸில் இருந்து வந்த பார்வையாளர்களும் அதிகாலை பயணத்தை மேற்கொண்டனர் என கூறப்படுகின்றது.

முதல் முறையாக, துபாய் ரன் வருடாந்திர DFC யின் முடிவைக் குறிக்கவில்லை. அடுத்த வார இறுதியில், இந்த ஆண்டு DFC யின் மற்றொரு பெரிய சமூக உடற்பயிற்சி கூட்டமான துபாய் யோகா ஜபீல் பூங்காவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel