ADVERTISEMENT

எரிமலை வெடிப்பால் இந்தியா-UAE இடையே சில விமான சேவைகள் ரத்து..!! பயணிகளுக்கு அறிவுறுத்தல்..

Published: 25 Nov 2025, 9:17 AM |
Updated: 25 Nov 2025, 9:17 AM |
Posted By: Menaka

எத்தியோப்பியாவின் ஹவுலி குப்பி (Hauli Gubbi) எரிமலை வெடித்ததால் அதிலிருந்து வெளியேறும் சாம்பல் செங்கடல் முழுவதும் பரவியுள்ளது. இது முக்கிய சர்வதேச விமான வழித்தடங்களில் நகர்ந்து செல்வதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட பல வளைகுடா நாடுகளுக்கும் இடையேயான விமானங்கள் அடிக்கடி பயன்படுத்தும் உயரமான விமானப் பாதைகளை பாதிக்கும் என்று கூறப்படும் நிலையில் விமான நடவடிக்கைகள் தடைபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்திய வானிலை ஆய்வுத் துறை படி, எத்தியோப்பியாவில் உள்ள எரிமலை செயல்பாட்டிலிருந்து வரும் சாம்பல் மேகங்கள் தற்போது சீனாவை நோக்கி நகர்ந்து வருகின்றன, மேலும் செவ்வாய்கிழமை இரவு 7:30 மணிக்கு இந்திய வான்வெளியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இந்திய விமான நிறுவனங்கள் வளைகுடா நாடுகளுக்கு இயக்கும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. முழுவிபரங்களைப் பின்வருமாறு பார்க்கலாம்:

பாதுகாப்பு காரணங்களுக்காக விமானங்களை ரத்து செய்விமான நிறுவனங்கள்

ஆகாசா ஏர் நவம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் ஜித்தா, குவைத் மற்றும் அபுதாபி செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. சுற்றியுள்ள வான்வெளியை பாதிக்கும் சாம்பல் படலம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஏழு நாட்களுக்குள் முழு பணத்தைத் திரும்பப் பெறலாம் அல்லது இலவச மறு முன்பதிவு செய்யலாம் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இதேபோல், இந்தியாவின் பட்ஜெட் கேரியரான இண்டிகோ நிறுவனமும் இடையூறுகளை உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய விமான வழித்தடங்களுக்கு அருகில் சாம்பல் நகர்ந்ததால், கண்ணூர்-அபுதாபி (6E1433) விமானம் ஒன்று முன்னெச்சரிக்கையாக அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. பயணிகளின் சிரமத்தைக் குறைக்க உலகளாவிய விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா

பாதிக்கப்பட்ட பகுதியின் மீது ஏற்கெனவே பறந்த விமானங்களில் முன்னெச்சரிக்கை சோதனைகளை விமான நிறுவனம் மேற்கொள்வதால், அதன் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

நவம்பர் 24 அன்று ரத்து செய்யப்பட்ட விமானங்கள்:

  • AI 106 – நியூயார்க் – டெல்லி
  • AI 102 – நியூயார்க் (JFK) – டெல்லி
  • AI 2204 – துபாய் – ஹைதராபாத்
  • AI 2290 – தோஹா – மும்பை
  • AI 2212 – துபாய் – சென்னை
  • AI 2250 – தம்மம் – மும்பை
  • AI 2284 – தோஹா – டெல்லி

நவம்பர் 25 அன்று ரத்து செய்யப்பட்ட விமானங்கள்:

  • AI 2822 – சென்னை – மும்பை
  • AI 2466 – ஹைதராபாத் – டெல்லி
  • AI 2444 / 2445 – மும்பை–ஹைதராபாத்–மும்பை
  • AI 2471 / 2472 – மும்பை–கொல்கத்தா–மும்பை

UAE–இந்தியா பயணத்தை இது எவ்வாறு பாதிக்கிறது?

விமான நிறுவனங்கள் வழித்தடங்களை மாற்றுவதால், பரபரப்பான இந்தியா–UAE வழித்தடத்தில் உள்ள விமானங்கள் தாமதங்கள், திசைதிருப்பல்கள் அல்லது ரத்துசெய்தல்களை சந்திக்க நேரிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, துபாய், அபுதாபி அல்லது வளைகுடா நாடுகள் வழியாக இணைக்கும் பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் தங்கள் விமான நிலையைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதற்கிடையில், விமான அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர், மேலும் சாம்பல் பிராந்தியத்தின் வான்வெளியை விட்டு முழுமையாக நகரும் போது வழக்கமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel