54வது ஈத் அல் எதிஹாத் கொண்டாட்டங்களின் போது அனைவருக்கும் சுமூகமான, பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சிகரமான விடுமுறையை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறு துபாய் காவல்துறை குடியிருப்பாளர்களை வலியுறுத்துகிறது.
இது குறித்து போக்குவரத்துத் துறை இயக்குநர் பிரிகேடியர் ஜுமா சலிம் பின் சுவைதான் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்கள் ஒழுக்கமாக இருக்கவும் போக்குவரத்து வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அழைப்பு விடுத்துள்ளார். பொறுப்பான நடத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் நேர்மறையான பிம்பத்தைப் பராமரிக்கவும், போக்குவரத்தை சீராகப் பராமரிக்கவும், கொண்டாட்டங்களின் போது ஆபத்தான சம்பவங்களைக் குறைக்கவும் உதவுகிறது என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
போக்குவரத்துத் திட்டங்கள்
கொண்டாட்டங்களின் போது எதிர்பார்க்கப்படும் கூட்டத்தை நிர்வகிக்க, துபாய் காவல்துறை பரபரப்பான பகுதிகளுக்கு விரிவான போக்குவரத்துத் திட்டங்களை உருவாக்கியுள்ளது. இதில் பின்வருவன அடங்கும்:
- முக்கிய சாலைகளில் கூடுதல் ரோந்துகள்
- பாதுகாக்கப்பட்ட நிகழ்வு இடங்கள்
- விரைவான அவசரகால நடவடிக்கைக்காக அதிகரித்த போலீஸ் இருப்பு
ரோந்துப் பணியாளர்கள் நிறுத்தப்படும் இடங்கள்
பர் துபாய்: 2nd டிசம்பர் ஸ்ட்ரீட், ஜுமேரா, அல் சுஃபூஹ், JBR
தேரா: அல் முரக்காபத், அல் ரிக்கா, அல் மம்சார், அல் ரஷிதியா, அல் கலீஜ் ஸ்ட்ரீட், அல் இத்திஹாத் ஸ்ட்ரீட், அம்மான் ஸ்ட்ரீட், யுனிவர்சிட்டி சிட்டி
ரோந்துகள் வாகன ஓட்டிகளை வழிநடத்தவும், போக்குவரத்து விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும், பாதுகாப்பற்ற நடத்தையைத் தடுக்கவும் உதவும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஓட்டுநர்களுக்கான முக்கியமான விதிகள்
சாலைகளில் கொண்டாடும் குடியிருப்பாளர்கள் இந்த பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்:
- வாகனத்தின் நம்பர் ப்ளேட்களை தெளிவாகத் தெரியும்படி வைத்திருங்கள்
- அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்படாவிட்டால் வாகன நிறத்தை மாற்றவோ அல்லது ஸ்டிக்கர்களைச் சேர்க்கவோ கூடாது
- போக்குவரத்தைத் தடுப்பதையோ அல்லது ஸ்டண்ட் செய்வதையோ தவிர்க்கவும்
- பயணிகள் ஜன்னல்கள் அல்லது சன்ரூஃப்களில் வெளியே தொங்கியவாறோ, சாய்ந்தவாறோ பயணிக்கக் கூடாது
- அதிக சத்தத்தை உருவாக்கும் அல்லது பார்வையைத் தடுக்கும் சட்டவிரோத மாற்றங்களைத் தவிர்க்கவும்
மேலும், துபாய் போலீஸ் செயலியில் உள்ள ‘Police Eye’ சேவை மூலமாகவோ அல்லது 901 ஐ அழைப்பதன் மூலமாகவோ மக்கள் பாதுகாப்பற்ற வாகனம் ஓட்டுதல் அல்லது போக்குவரத்து சிக்கல்களைப் புகாரளிக்கலாம். பாதுகாப்பான கொண்டாட்டத்திற்கு சமூக ஒத்துழைப்பு அவசியம் என்று காவல்துறை அறிவுறுத்துகிறது.
அதுமட்டுமல்லாமல், சாலை பயனர்களை ஆபத்தில் ஆழ்த்தும் எந்தவொரு மீறல்களுக்கும் எதிராக துபாய் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று பிரிகேடியர் ஜுமா உறுதிப்படுத்தியுள்ளார். அனைவரும் விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வது ஈத் அல் எதிஹாத் கொண்டாட்டங்களை அனைவருக்கும் பாதுகாப்பாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்ற உதவும் என்று மீண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel