துபாய் நகரமானது நீண்ட காலமாக உலகின் பிரம்மிப்பான வான்வழி சாகசங்களுக்கு மேடையாக இருந்து வருகிறது. பாம் ஜுமேரா மேல் ஸ்கை டைவ் செய்வது முதல் வானளாவிய கட்டிடங்களிலிருந்து பேஸ் ஜம்ப் (base jump) செய்வது வரை என நம்பமுடியாத ஸ்டண்ட்கள் துபாயில் நிகழ்த்தப்பட்டிருகின்றன. ஆனால் இந்த முறை, கவனத்தை ஈர்த்தது ஒரு துணிச்சலான பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 1,000 அடி உயரத்தில் இருந்து தொங்கவிடப்பட்ட மர ஊஞ்சலில் ஒரு பெண் ஸ்கை டைவர் ஊஞ்சலாடிய காட்சி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பின்னர் அவர் கைட் பீச்சில் ஒரு பேஸ் ஜம்பில் குதித்து தரையிறங்கியுள்ளார். இந்த சாகசம், துபாய் ஏன் அசாதாரண சாகசம் மற்றும் வான்வழி புதுமைகளின் உலகளாவிய தலைநகராக உள்ளது என்பதை மீண்டும் உலகிற்கு நினைவூட்டியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை வியக்க வைக்கும் உலகின் முதல் வான்வழி ஸ்டண்ட் போட்டியின் பின்னணியில் உள்ள விவரங்களை வெளியிட்டுள்ளது. துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் இந்த வியத்தகு சாதனையை முன்னதாகப் பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து தெரிவிக்கையில் ஸ்கைடைவ் துபாயின் 15வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக இந்த ஸ்டண்ட் நிகழ்த்தப்பட்டது மற்றும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலுடன் இணைந்து உருவாக்கப்பட்டதாக ஸ்கை டைவ் துபாய் தெரிவித்துள்ளது. இந்த வான்வழி சாகசத்தை சமூகவளைத் தளங்கள் வழியாக பார்த்த பார்வையாளர்கள், அந்த துணிச்சலான பெண், தனது தீவிர வான்வழி நிகழ்ச்சிகளுக்கு பெயர் பெற்ற சாதனை படைத்த ஸ்கைடைவர் மாகலி ஃபோல்க்னர் பிராஃப் என்று அடையாளம் கண்டுள்ளனர்.
ஸ்கைடைவ் துபாயின் கூற்றுப்படி, இந்த சவால் ஒரு இயங்கும் ஏர்ஷிப்பில் இருந்து நிகழ்த்தப்பட்டது என கூறப்பட்டுள்ளது. நகர்ப்புற நிலப்பரப்பில் இதுபோன்ற ஒரு ஸ்டண்ட் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். ஏர்ஷிப்பின் அடியில் கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் தொங்கிக் கொண்டு, ஆறு கிலோமீட்டருக்கும் அதிகமான நீர்வழிப் பாதைகள் மற்றும் நாத் அல் ஷெபாவிலிருந்து கைட் பீச் வரை 14 கிலோமீட்டர் பாதையில் மெதுவாக நகர்ந்து இறுதியில் பேஸ் ஜம்ப் செய்து தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.
15 ஆண்டுகால வானளாவிய புதுமை
15 ஆண்டு காலமாக துபாயின் வானத்தை சாகசம், புதுமை மற்றும் உலகத் தரம் வாய்ந்த ஸ்கைடைவிங்கிற்கான உலகளாவிய மையமாக மாற்றியுள்ளதாக ஸ்கைடைவ் துபாய் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் இப்போது எமிரேட்டின் வானலையை பாம் ஜுமேரா மற்றும் பாலைவனத்தின் மேலே மிதக்கும் பாராசூட்டுகளின் சின்னமான காட்சியுடன் தொடர்புபடுத்துகின்றனர் என்றும் கூறுகிறது.
ஸ்கைடைவ் துபாய் தொடங்கப்பட்டதிலிருந்து, 475,000 க்கும் மேற்பட்ட டேன்டெம் ஸ்கைடைவ்களை (tandem skydives) முடித்துள்ளது என்றும், 100 க்கும் மேற்பட்ட பிரபலங்கள் மற்றும் விஐபிகளை வரவேற்றுள்ளது என்றும், மேலும் 300 க்கும் மேற்பட்ட வான்வழி திட்டங்களை கண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 35 நாடுகளைச் சேர்ந்த 95 நிபுணர் பயிற்றுனர்களைக் கொண்ட குழு, அதன் செயல்பாடுகளை தொடர்ந்து ஆதரித்து, உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட ஸ்கை டைவிங் இடங்களில் ஒன்றாக அதன் நிலையை உறுதிப்படுத்துகிறது.
ஒன்றாக இணைந்த அனுபவங்களுக்கு அப்பால், ஸ்கை டைவ் துபாயின் பாலைவன வளாகம் தொழில்முறை ஸ்கை டைவர்கள் மற்றும் புதிய தனி ஜம்பர்களுக்கான பயிற்சி தளமாக செயல்படுகிறது. இந்த மையம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆக்சிலரேட்டட் ஃப்ரீஃபால் (AFF) பாடநெறி மூலம் ஸ்கைடைவ் செய்வது எப்படி என்பதைக் கற்பிக்கிறது மற்றும் வழிகாட்டுதல் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரே சமூகத்தின் கீழ் மாணவர்கள், உயரடுக்கு விளையாட்டு வீரர்கள், தேசிய அணிகள் அனைவரும் நிபுணர்களுடன் பயிற்சி பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக, ஸ்கை டைவ் துபாய் முக்கிய வான்வழி காட்சிப்படுத்தல்களில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. சர்வதேச பாராசூட்டிங் சாம்பியன்ஷிப்கள் முதல் உலக சாதனை வடிவங்கள், விங்சூட் ஜம்ப்கள், பலூன் ஜம்ப்கள் மற்றும் ஹெலிபேட் டேக்-ஆஃப்கள் வரை சாகச நடவடிக்கைகள் வரிசையாக உள்ளன. நிபுணர்கள், விமானிகள், பயிற்றுனர்கள் மற்றும் செயல்பாட்டுக் குழுக்களால் இயக்கப்படும் தனிப்பயன் வான்வழி திட்டங்களை உருவாக்க நிறுவனம் 200 க்கும் மேற்பட்ட உலகளாவிய பிராண்டுகளுடன் ஒத்துழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஷமல் ஹோல்டிங்கின் ஓய்வு நேர நிர்வாக துணைத் தலைவர் முகமது ஜவாத் என்பவர் பேசுகையில், 15 ஆண்டுகால மைல்கல், சாகச விளையாட்டுகளில் ஸ்கைடைவ் துபாயின் தரத்தை உயர்த்துவதற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
“எங்கள் பயணம் எப்போதும் கனவுகள் பறக்க உதவுவதாகவே இருந்து வருகிறது. பாம் டிராப்சோன் (palm dropzone) முதல் பாலைவன வளாகம் வரை, ஸ்கைடைவ் துபாய் உலகத் தரம் வாய்ந்த அனுபவங்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, அதே நேரத்தில் பாதுகாப்பு மற்றும் புதுமையின் மிக உயர்ந்த தரத்தைப் பராமரிக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel