இஸ்லாமியப் பெருமக்களின் புனித மாதமான ரமலான் மாதம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் துபாய் நகரத்தில் குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கையானது, சற்று மாற்றம் காணும். துபாய்க்கு புதிதாக வருபவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும், துபாயின் கலாச்சாரத்தை அனுபவிக்க மிகவும் சிறந்த காலங்களில் ரமலான் மாதமும் ஒன்றாகும். ஏனெனில், பரபரப்பான இரவு சந்தைகள், பொது இஃப்தார் மற்றும் தொண்டு முயற்சிகள் என நகரம் முழுவதும் பண்டிகைச் சூழல் நிறைந்திருக்கும்.
இத்தகைய புனித காலகட்டத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளைப் புரிந்துகொள்வது, துபாயில் ரமலானை மிகவும் சிறப்பானதாக்குவதை முழுமையாக அனுபவிக்கும் அதே வேளையில், அமீரகத்தின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலின்படி, நீங்கள் புனித மாதத்தை அனுபவிப்பதை உறுதிசெய்ய உதவுகிறது.
அன்றாட வாழ்க்கையில் மாற்றங்கள்
துபாயைப் பொறுத்தவரை புனித மாதத்தில் மாலை நேரங்கள் நீண்டும், சுற்றுப்புறங்கள் பகலில் அமைதியாகவும், சூரிய மறைவிற்கு பிறகு உயிரோட்டமாகவும் இருக்கும். இந்த மாதத்தில் மக்கள் பொது இடங்களில் சாப்பிடலாமா அல்லது குடிக்கலாமா என்பது மிகவும் பொதுவான கேள்விகளில் ஒன்றாக உள்ளது. முஸ்லிம் அல்லாதவர்களுக்காக சமீபத்திய ஆண்டுகளாக, உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் நாள் முழுவதும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பகல் நேரங்களில் பொது இடங்களில் சாப்பிடுவது, குடிப்பது ஆகியவை மரியாதை நிமித்தமாக ஊக்கப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், பல ஹோட்டல்கள் மற்றும் இடங்கள் நோன்பு இல்லாத விருந்தினர்களுக்கு வசதியான சாப்பாட்டுப் பகுதிகளை வழங்குகின்றன.
ரமலான் அமைதியான மற்றும் இறைவணக்கத்திற்கான நேரம் என்பதால் உரத்த இசை, உயர்ந்த குரல்கள் மற்றும் பொது விவாதங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஸ்பீக்கர்களுக்குப் பதிலாக ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துவதும், உரையாடல்களை அளவோடு வைத்திருப்பதும் அமைதியான சூழ்நிலையைப் பராமரிக்க உதவுகிறது.
தவிர்க்க வேண்டியவை
கார்கள் அல்லது பொது இடங்களில் உரத்த இசையைத் தவிர்க்க வேண்டும், மேலும் பல நிறுவனங்கள் ரமலான் மாதத்திற்கான மாற்றப்பட்ட அட்டவணையில் செயல்படுவதால், வேலை நேரம் குறைவானதாக இருக்கும்.
நகரம் முழுவதும் மாற்றியமைக்கப்படும் வழக்கங்கள்
ரமலான் மாதத்தில் அமீரகம் முழுவதும் அனைத்து ஊழியர்களுக்கும் வேலை நேரம் இரண்டு மணிநேரம் குறைக்கப்படுகிறது. ஷாப்பிங் மால்கள் பெரும்பாலும் தாமதமாகத் திறக்கப்பட்டு இரவு வரை திறந்திருக்கும், குறிப்பாக வார இறுதி நாட்களில் கூடுதல் நேரம் வரை செயல்படும். சில உணவகங்கள் சூரிய மறைவிற்கு பிறகு மட்டுமே திறக்கப்படலாம், மேலும் பார்க்கிங் அட்டவணைகள் மாறக்கூடும்.
இதற்கிடையில், நோன்பு கடைபிடிக்கும் ஓட்டுநர்கள் வீடு திரும்பும்போது போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும், எனவே இப்தாருக்கு சற்று முன்பு சாலைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சோர்வு மற்றும் நேர அழுத்தம் ஏற்படக்கூடும் என்பதால், கூடுதல் பயண நேரத்தை ஒதுக்குவதும் எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டுவதும் அறிவுறுத்தப்படுகிறது. இஃப்தார் நேரமான சூரியன் மறைவின் போது டாக்ஸிகள் கிடைப்பதும் கடினமாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே முன்பதிவு செய்வதும் உதவியாக இருக்கும்.
மரபுகள் மற்றும் கலாச்சார தருணங்கள்
இதற்கிடையில், ரமலானின் மிகவும் விரும்பத்தக்க மரபுகளில் ஒன்று துபாய் முழுவதும் தொடர்கின்றன. அது நோன்பின் முடிவைக் குறிக்க சூரிய மறைவில் பீரங்கிகளை சுடுவதாகும் (cannon firing). இது நவீன நகரத்தை அதன் கடந்த காலத்துடன் இணைக்கும் ஒரு நடைமுறையாகும், மேலும் பலருக்கு மறக்கமுடியாத தருணமாக உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, ரமலான் துபாயின் கலாச்சார ஆழத்தை ஆராயவும் ஒரு வாய்ப்பாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel