ADVERTISEMENT

வெளிநாட்டவர்களுக்கான 10 ஆண்டு ரெசிடென்சி திட்டத்தை அறிவித்துள்ள கத்தார்..!!!

Published: 3 Feb 2026, 9:19 AM |
Updated: 3 Feb 2026, 9:19 AM |
Posted By: Menaka

தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் மூத்த வணிக நிர்வாகிகளை ஈர்க்கும் நோக்கில், ஒரு புதிய 10 ஆண்டு வசிப்பிடத் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி (Sheikh Mohammed bin Abdulrahman Al Thani) அவர்கள், அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

வளைகுடா பிராந்தியத்தில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், திறமையான வல்லுநர்கள் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு நாட்டை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றும் கத்தாரின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா போன்ற அண்டை நாடுகள், திறமைகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஏற்கனவே நீண்ட கால வசிப்பிடத் திட்டங்களைத் தொடங்கியுள்ள நிலையில் தற்பொழுது கத்தாரும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்புடன், கத்தார் முதலீட்டு ஆணையம் (QIA) தனது தற்போதைய மூலதனத் திட்டத்தில் (venture capital programme) 2 பில்லியன் டாலரைச் சேர்க்கும் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

“Fund of Funds” என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம், தற்போது 1 பில்லியன் டாலர் மதிப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இது சர்வதேச மூலதன நிறுவனங்களை கத்தாருக்குள் கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பல்வகைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பது, தொழில்முனைவோரை ஊக்குவிப்பது மற்றும் எண்ணெய் வருவாயை நாடு சார்ந்திருப்பதைக் குறைப்பது ஆகியவையே இதன் நோக்கமாகும்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், வெளிநாட்டவர்களுக்கு , இந்த புதிய வசிப்பிடத் திட்டம் நீண்ட கால நிலைத்தன்மை, வணிக வாய்ப்புகள் மற்றும் அடிக்கடி விசா புதுப்பித்தல் இல்லாமல் கத்தாரில் வாழவும் வேலை செய்யவும் ஒரு தெளிவான பாதையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel