ADVERTISEMENT

துபாய்: ஷேக் சயீத் சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்!! ஸ்தம்பித்த போக்குவரத்து …

Published: 6 Feb 2026, 4:20 PM |
Updated: 6 Feb 2026, 4:26 PM |
Posted By: Menaka

துபாயில் இன்று பிசினஸ் பே மற்றும் டவுன்டவுன் துபாய் பகுதிக்கு அருகே உள்ள பிரதான சாலையான ஷேக் சையத் சாலையில் ஒரு வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் சாலையின் இரு திசைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

தீப்பிடித்து எரிந்த காரில் இருந்து அடர்த்தியான கருப்புப் புகை மேலே எழுவதைக் காண முடிந்ததாகவும், இது பரபரப்பான அந்த நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விவரித்த வாகன ஓட்டி, “நான் என் நண்பர்களுடன் அபுதாபி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, ​​திடீரென்று வழக்கத்திற்கு மாறாகக் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கினோம், முதலில் என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் நாங்கள் நெருங்கிச் சென்றபோது, ​​ஒரு வாகனம் தீப்பிடித்து எரிவதைக் கண்டோம். தீயணைப்பு வாகனங்கள் ஏற்கனவே அங்கு இருந்தன, மேலும் பல அவசரகால வாகனங்கள் எங்களைக் கடந்து வேகமாகச் சென்றன” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஓட்டுநர்களின் கூற்றுப்படி, அவசர சேவைகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததும், இந்தத் தீ விபத்து ஷேக் சையத் சாலையில் பெரும் போக்குவரத்து தாமதத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசல் ஜூமைரா வரை நீண்டிருந்தது எனவும் கூறப்படுகின்றது. அத்துடன், வாகனங்கள் நீண்ட நேரத்திற்கு மெதுவாகவே நகர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அறிக்கைகள் கூறுகின்றன, மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்த விவரங்களை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel