ADVERTISEMENT

அமீரகத்தில் இரவில் தனியாக நடப்பது பாதுகாப்பாக உணர்வதாக 99% பேர் கருத்து!!

Published: 20 Feb 2026, 8:55 PM |
Updated: 20 Feb 2026, 8:55 PM |
Posted By: Menaka

உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகம் தனது நற்பெயரை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது, கிட்டத்தட்ட 99 சதவீத குடியிருப்பாளர்கள் இரவில் தனியாக நடப்பது பாதுகாப்பாக இருப்பதாகக் கூறுகின்றனர் என்று ஒரு புதிய நாடு தழுவிய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

ADVERTISEMENT

‘Federal Competitiveness and Statistics Centre’ என்ற நிறுவனத்தால் நடத்தப்பட்ட 2025-ம் ஆண்டிற்கான வாழ்க்கைத் தரப் பாதுகாப்பு கணக்கெடுப்பில் (Quality of Life Security Survey), பதிலளித்தவர்களில் 98.7 சதவீத பேர் அமீரகத்தில் இருட்டிய பிறகு தனியாக நடக்கும்போது பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளது. குறிப்பாக, 98.1 சதவீத பெண்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். இது சமூகங்கள் முழுவதும் வலுவான பொது நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

இந்த கணக்கெடுப்பு நாடு முழுவதும் 6,775 பேரிடமிருந்து பதில்களைச் சேகரித்தது என்றும், குடியிருப்பாளர்கள் அன்றாட வாழ்க்கையில் பாதுகாப்பை எவ்வாறு உணர்கிறார்கள் என்பதற்கான விளக்கத்தை இது வழங்குகிறதுஎனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஆய்வு முடிவுகள் நாட்டின் நிலையான மற்றும் பாதுகாப்பான சூழலில் அதிக அளவிலான சமூக நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கான உலகளாவிய மாதிரியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலைப்பாட்டை முடிவுகள் வலுப்படுத்துகின்றன என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel

ADVERTISEMENT