ADVERTISEMENT

மத்திய கிழக்கில் தொடரும் ஏவுகணை தாக்குதல்கள்: கத்தார் LNG, சவுதி சுத்திகரிப்பு நிலையம், இஸ்ரேலிய எண்ணெய், எரிவாயு ஆலைகள் முடக்கம்!!

Published: 3 Mar 2026, 7:45 AM |
Updated: 3 Mar 2026, 7:45 AM |
Posted By: Menaka

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளை தாக்கி வருவதால், வளைகுடா முழுவதும் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள் முன்னெச்சரிக்கையாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, இதனால் கத்தார், சவுதி அரேபியா, ஈராக் மற்றும் இஸ்ரேலில் இருந்து எரிசக்தி விநியோகம் தடைபட்டுள்ளது. மேலும் உலகளாவிய விலை உயர்வுக்கு காரணமாக அமையும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கத்தார் LNG உற்பத்தி நிறுத்தம்

உலகளாவிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) சுமார் 20% வழங்கும் கத்தார், ஈரானிய ட்ரோன்கள் உற்பத்தி மையங்களை தாக்கிய பின்னர் அதன் ராஸ் லஃபான் வளாகத்தில் (Ras Laffan complex) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உற்பத்தியை நிறுத்தியது. மேலும், பெட்ரோ கெமிக்கல் ஆலைகளுக்கு சொந்தமான மெசயீத் தொழில்துறை மண்டலத்தையும் (Mesaieed industrial zone) ட்ரோன்கள் தாக்கின. ஆசியாவிற்கான அதன் பெரும்பாலான ஏற்றுமதிகள் செல்ல வேண்டிய நிலையில், இத்தகைய தாக்குதல்களால் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.

சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையம் பாதிப்பு

சவூதியின் மிகப்பெரிய உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையமான ராஸ் தனுராவில் (Ras Tanura) நடத்தப்பட்ட தாக்குதலில் ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டன. அதில் உடைந்த பாகங்கள் தீயை ஓரளவுக்கு மட்டுமே ஏற்படுத்தின, இருப்பினும் அதிகாரிகள் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினர் மற்றும் உள்நாட்டு எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படவில்லை என்று கூறினர். ராஸ் தனுரா சவுதி கச்சா எண்ணெய்க்கான ஒரு முக்கியமான ஏற்றுமதி முனையமாகும். உள்ளூர் விநியோகம் நிலையானதாக இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிநிறுத்தம் சவுதி அரேபியாவின் முக்கியமான ஏற்றுமதி மையத்தின் பாதிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ADVERTISEMENT

பிற தாக்கங்கள்

  • ஈராக் மற்றும் இஸ்ரேல் செயல்பாடுகளை நிறுத்துதல்
    ஈராக்கிய குர்திஸ்தானில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக ஒரு நாளைக்கு 200,000 பீப்பாய்கள் உற்பத்தியை நிறுத்தின. இஸ்ரேலில், செவ்ரான் (Chevron) மாபெரும் லெவியதன் எரிவாயு மையத்தை (Leviathan gas field) மூடியது.
  • ஈரானில் பாதிப்பு
    ஈரானின் 90% கச்சா ஏற்றுமதியை கையாளும் கார்க் தீவில் (Kharg Island) குண்டு வெடிப்புகள் பதிவாகியுள்ளன, இருப்பினும் சேதத்தின் அளவு தெளிவாகத் தெரியவில்லை. OPEC இன் மூன்றாவது பெரிய உற்பத்தியாளரான ஈரான், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4.5% வழங்குகின்றது.

உலகளாவிய சந்தை அதிர்ச்சி

  • ஐரோப்பிய எரிவாயு விலைகள் 46% உயர்ந்தன.
  • எண்ணெய் விலைகள் 13% இன்ட்ராடே உயர்ந்து, பீப்பாய்க்கு 82 டாலரை எட்டியது, ஜனவரி 2025க்குப் பிறகு இதுவே அதிகபட்சம் ஆகும்.
  • உலகளாவிய எண்ணெயில் ஐந்தில் ஒரு பங்கிற்கு ஒரு வழித்தடமான ஹார்முஸ் நீரிணை வழியாக அனுப்பும் கப்பல் போக்குவரத்து கடுமையாகக் குறைந்தது. இதனால் எரிவாயு விலைகள் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எச்சரிக்கை விடுக்கும் ஆய்வாளர்கள்

சவுதி, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்கள் சவுதி அரேபியாவையும் அதன் அண்டை நாடுகளையும் தெஹ்ரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளில் சேர நெருக்கமாகத் தள்ளக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர்.

ADVERTISEMENT

இந்த தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்தால் உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் அது சம்பந்தமான தயாரிப்புகளில் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தை எதிர்கொள்ள நேரிடும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel