ADVERTISEMENT

துபாய் மசூதிகளில் ஃபஜ்ர் மற்றும் மஹ்ரிப் தொழுகைகளின் போது துஆ அல் குனூத் ஓதப்படும் என அறிவிப்பு!!

Published: 19 Mar 2026, 4:41 AM |
Updated: 19 Mar 2026, 6:50 AM |
Posted By: Menaka

துபாய் முழுவதும் உள்ள மசூதிகளில் நேற்று (புதன்கிழமை) முதல் ஃபஜ்ர் மற்றும் மஹ்ரிப் தொழுகைகளின் போது துஆ அல் குனூத் ஓதப்படும் என இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை (IACAD) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

கஷ்ட காலங்களில் கடைப்பிடிக்கப்படும் நபிவழி மரபுகளைப் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அசாதாரண சூழ்நிலைகளில் மசூதி விவகாரங்களை ஒழுங்கமைக்கவும், முக்கியமான மத நடைமுறைகளைப் புதுப்பிக்கவும் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதி இது என்றும் அத்துறை விளக்கமளித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தொடர்ச்சியான பாதுகாப்பு, பத்திரத்தன்மை மற்றும் ஸ்திரத்தன்மை வேண்டியும், அதன் தலைமைக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கவும் பிரார்த்தனை செய்வதன் மூலம், வழிபாட்டாளர்களை இந்த வேண்டுதலில் தீவிரமாக ஈடுபடுமாறு IACAD அழைப்பு விடுத்துள்ளது.

ADVERTISEMENT

துஆ அல் குனூத் என்பது தொழுகையின் போது ஓதப்படும் ஒரு பிரபலமான இஸ்லாமியப் பிரார்த்தனையாகும். இதன் மூலம் தொழுபவர்கள் இறைவனிடம் இருந்து வழிகாட்டுதலையும், பாதுகாப்பையும், கருணையையும் கோருகின்றனர். இது பாரம்பரியமாக மசூதிகளில் குறிப்பிட்ட சூழ்நிலைகளில், குறிப்பாக கடினமான காலங்களில், கூட்டாக ஓதப்படுகிறது.

எனவே, தற்போதைய காலகட்டத்தில் சமூகத்திற்குள் ஆன்மீக ஒற்றுமையையும் ஆதரவையும் வலுப்படுத்துவதையும், பிரார்த்தனையை ஊக்குவிப்பதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel