அமீரகத்தில் 10 மில்லியன் உணவு திட்டத்தில் கைகோர்க்கும் உணவகங்கள்..!!! 4 இலட்சம் உணவுகள் நன்கொடை…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஐம்பது உணவகங்கள் நாட்டின் மிகப்பெரிய உணவு விநியோக உந்துதலான ’10 மில்லியன் உணவு’ திட்டத்திற்கு 400,000 க்கும் மேற்பட்ட உணவுகளை மொத்தமாக வழங்கியுள்ளன.
கொரோனா வைரஸால் நிதி ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் உணவளிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த 10 மில்லியன் உணவு திட்டத்திற்கு உணவகங்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 13,360 உணவுகளை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் கடந்த வாரம் தொடங்கிய இந்த மனிதாபிமான பிரச்சாரத்திற்காக தொடர்ந்து பல வகையில் நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் மில்லியன் கணக்கான திர்ஹம்களை நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்துள்ள நிலையில், இந்த பிரச்சாரத்திற்கு ஒரு மில்லியன் வாழைப்பழங்கள் மற்றும் இரண்டு டன் ஆப்பிள்கள் போன்ற தனித்துவமான நன்கொடைகளும் கிடைத்துள்ளன.
இதற்கிடையில், இந்த பிரச்சாரத்தின் பயனாளிகளுக்கு ஆயிரக்கணக்கான உணவுகளை விநியோகிக்க 30 டாக்சிகளை ஒதுக்கியுள்ளதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
source : Khaleej Times