வளைகுடா செய்திகள்

குவைத் கொரோனா அப்டேட் (ஆகஸ்ட் 15, 2020) : பாதிக்கப்பட்டோர் 512 பேர்..!! குணமடைந்தோர் 779 பேர்..!!

குவைத்தில் இன்று (சனிக்கிழமை, ஆகஸ்ட் 15, 2020) புதிதாக 512 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குவைத்தின் சுகாதார அமைச்சகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குவைத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 75,697 ஆக உயர்ந்துள்ளது.

குவைத்தில் கொரோனாவிற்கு இன்று 4 பேர் பலியாகியுள்ளனர். இதனால் குவைத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 498 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 779 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 67,519 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!