வளைகுடா செய்திகள்
குவைத் கொரோனா அப்டேட் (செப்டம்பர் 21, 2020) : பாதிக்கப்பட்டோர் 530 பேர்..!! குணமடைந்தோர் 762 பேர்..!!
குவைத்தில் இன்று (திங்கள்கிழமை, செப்டம்பர் 21, 2020) புதிதாக 530 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குவைத்தின் சுகாதார அமைச்சகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குவைத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 99,964 ஆக உயர்ந்துள்ளது.
குவைத்தில் கொரோனாவிற்கு ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் குவைத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 585 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்றைய நாளில் மட்டும் 762 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 90,930 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.