ஷாப்பிங் ஆஃபர்ஸ்

UAE: பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி வழங்கும் ஒரு நாள் சிறப்பு விற்பனை…!! ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே…!!

துபாய்வாசிகளுக்கு தாங்கள் வாங்கும் உலகளாவிய பிராண்டுகளின் பொருட்களுக்கு 90 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

துபாயில் ஷாப்பிங் செய்பவர்கள் துபாய் மாலில் பொருட்கள் வாங்கினால் அதிகளவில் தள்ளுபடியைப் பெறலாம்.

ஒரு நாள் நடைபெறும் இந்த மெகா விற்பனை ஜனவரி 15,  தொடங்கும் மற்றும் பல உலகளாவிய பிராண்டுகளுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடியையும் பெறலாம்.

துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் ஒரு பகுதியாக DTCM உடன் இணைந்து இந்த மெகா விற்பனை தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது பற்றி கூறுகையில் “காலை 10 மணி முதல் கடையில் அல்லது ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு இந்த தள்ளுபடி வழங்கப்படும். இருப்பினும் தள்ளுபடி பொருட்களுக்கான ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என்பதால் 90 சதவீதம் வரை தள்ளுபடி பெற முந்திக்கொள்ளுங்கள்” என்று DSF கூறியுள்ளது.

மேலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, துபாயின் மால்கள், சில்லறை விற்பனை கடைகள் மற்றும் இடங்கள் அனைத்தும் பொது சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட கொரோனாவிற்கான கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கின்றன. அதே நேரத்தில் பார்வையாளர்களையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாகவும் எளிதாகவும் வைத்திருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!