ADVERTISEMENT

அமீரகத்தில் தொடங்கவுள்ள கோடைகாலம்..!! அதிகபட்சமாக 41 °C வரை வெப்பநிலை உயரும் என வானிலை மையம் தகவல்..!!

Published: 12 Mar 2022, 12:00 PM |
Updated: 12 Mar 2022, 12:39 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே புழுதிப்புயல் பரவலாக உருவாகி வருகிறது. இதன் காரணமாக சாலையில் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் பார்க்க முடியாமல் தெரிவுநிலை (visibility) பாதிக்கப்படுவதுடன் காற்றும் வேகமாக வீசுவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என அனைவருக்கும் இது இடையூறாக இருந்து வருகிறது.

ADVERTISEMENT

இதற்கு முன்னர் கடந்த மாதம் வரையிலும் அமீரகத்தில் இரவு நேரங்களிலும் அதிகாலையிலும் மூடுபனி நிலவி வந்த நிலையில் அதில் தற்பொழுது மாற்றம் கண்டு மணல்புயல் மற்றும் புழுதிப்புயல் ஏற்பட்டு வருகிறது. இவை ஏற்பட ஆரம்பித்தாலே வளைகுடா வாசிகளுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை கோடைகாலம் ஆரம்பிக்க போகின்றது என்று.. அதற்கு மற்றொரு நினைவூட்டலாக தினசரி வெப்பநிலையும் உயர்ந்து கொண்டிருப்பது கோடைகாலம் ஆரம்பிப்பதை அனைவருக்கும் நினைவூட்டிக் கொண்டிருக்கின்றது.

அதனடிப்படையில் கடந்த சில நாட்களாகவே தேசிய வானிலை மையம் அமீரகத்தில் தூசுப்புயல் எச்சரிக்கையையும் அவ்வப்போது விடுக்கின்றது. அதனைத் தொடர்ந்து இன்று தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) படி, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெரும்பாலும் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் பகல் நேரத்தில் அது சூடாகவும், மங்கலாகவும், தூசி நிறைந்ததாகவும் இருக்கும் என்றும் கூறியுள்ளது.

ADVERTISEMENT

NCM கூறுகையில், “அமீரகத்தின்  உட்புற பகுதிகளில் வெப்பநிலை அதிகபட்சம் 35-40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை அதிகபட்சமாக 36-41°C ஆகவும், மலைப் பகுதிகளில் 20-27°C ஆகவும் இருக்கும். பகலில் காற்று சற்று பலமாக இருக்கும், தூசியை வீசும்” என தெரிவித்துள்ளது.

மேலும் கூறுகையில், “லேசான முதல் மிதமான காற்று, 10-20 கிமீ வேகத்தில் தூசி மற்றும் மணலை வீசுகிறது. சில நேரம் இது மணிக்கு 30 கிமீ வேகத்தை எட்டும்” என்று எதிர்பார்க்கலாம்.

ADVERTISEMENT

புழுதியானது பார்வைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக சாலையில் செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. அலர்ஜியால் அவதிப்படுபவர்களும் வெளியில் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடலோரப் பகுதிகளில் ஈரப்பதம் 65-85 சதவீதமாக இருக்கும், மலைப் பகுதிகளில் 35-50 சதவீதமாகவும், உள் பகுதிகளில் 40-60 சதவீதமாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.