அமீரக செய்திகள்இந்திய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட இருந்த விமானத்தில் இயந்திரக்கோளாறு.. தப்பிய 175 பயணிகள்..!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லவிருந்த விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன் விமானத்தின் எந்திரங்களை சரி பார்க்கும்போது விமான எந்திரங்களில் பெரும் அளவு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து பயணிகளை விமானத்தில் ஏற்ற தடை விதிக்கப்பட்டு, விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

விமான என்ஜினீயர்கள் குழுவினர் வந்து விமான எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டும், கோளாறை சரி செய்ய முடியவில்லை. விமான நிறுவன அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் விமானத்தில் பழுது ஏற்பட்டதால் ரத்து என அறிவிக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை தகுந்த நேரத்தில் விமானி கண்டு பிடித்துவிட்டதால் விபத்து தவிா்க்கப்பட்டது. இதனால் 169 பயணிகள், 6 விமான ஊழியா்கள் என 175 போ் உயிா் தப்பினா்.

Related Articles

Back to top button
error: Content is protected !!