அமீரக செய்திகள்
துபாய்: விபத்து காரணமாக சாலையில் போக்குவரத்து நெரிசல்..!! காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை..!!
துபாயில் ஓத் மேத்தா ஸ்ட்ரீட்டில் இன்று (புதன்கிழமை) காலை விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு பதிவில், துபாய் காவல்துறை இந்த விபத்தானது லத்தீஃபா மருத்துவமனையினை நோக்கிய திசையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை ஓட்டும் போது வாகன ஓட்டிகள் கவனத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.