துபாய்: அல் மின்ஹாத் பகுதியை “ஹிந்த் சிட்டி” என பெயர் மாற்றம் செய்த துபாய் ஆட்சியாளர்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை துபாயில் குறிப்பிட்ட பகுதிக்கு “ஹிந்த் சிட்டியை” என்று பெயர் மாற்றம் செய்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
துபாய் ஆட்சியாளர் பிறப்பித்த உத்தரவுகளின்படி, அல் மின்ஹாத் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ‘ஹிந்த் சிட்டி’ என மறுபெயரிடப்பட்டுள்ளன. இந்த சிட்டியானது நான்கு மண்டலங்களை (zones) உள்ளடக்கியது என்றும் இது எமிரேட்ஸ் சாலை, துபாய்-அல் அய்ன் சாலை மற்றும் ஜெபல் அலி-லெஹ்பாப் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளை உள்ளடக்கியது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நான்கு ஸோன்களும் ஹிந்த்-1, ஹிந்த்-2, ஹிந்த்-3, ஹிந்த்-4 என அழைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நகரத்தில் எமிராட்டி குடிமக்களுக்கான வீடுகளும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.