அமீரக அதிபரை அபுதாபியில் சந்தித்த துபாய் ஆட்சியாளர்..!! நாட்டின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து உரையாடியதாக தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மாண்புமிகு ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் அவர்களை அமீரகத்தின் துணைத்தலைவரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் அபுதாபியில் சந்தித்துள்ளார். அபுதாபியில் இருக்கும் கஸ்ர் அல் பஹ்ர் மஜ்லிஸில் அமீரக அதிபர் துபாய் ஆட்சியாளரை வரவேற்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
இரு தலைவர்களும் நட்பு ரீதியான உரையாடலில் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு தலைப்புகளை விவாதித்துள்ளனர்.
மேலும், அவற்றில் எமிரேட்டுகளின் பலன்களை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் நாட்டு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நாட்டின் தலைவர்கள் பின்பற்றும் லட்சிய வளர்ச்சி உத்தியை முன்னேற்றுதல் போன்றவையும் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அமீரகத்தின் சாதனைகளை எல்லா முனைகளிலும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர். மேலும், அல் அய்ன் பிராந்திய ஆட்சியாளரின் பிரதிநிதியான ஷேக் தஹ்னூன் பின் முகமது அல் நஹ்யான் உட்பட ஷேக் சைஃப் பின் முகமது அல் நஹ்யான், ஷேக் ஹஸ்ஸா பின் சயீத் அல் நஹ்யான், அபுதாபி நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷேக் அல் நஹ்யான் சைஃப் பின் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான், ஷேக் ஹமத் பின் சயீத் அல் நஹ்யான், அபுதாபி நிர்வாகக் குழு உறுப்பினர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான், வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் காலித் பின் சயீத் அல் நஹ்யான், நிர்ணயம் செய்யும் மக்களுக்கான சயீத் உயர் அமைப்பின் தலைவர் (ZHO) மற்றும் பல ஷேக்குகளும் பங்கேற்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி அவர்களுடன் மூத்த அதிகாரிகள் பலரும் குடிமக்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.