அமீரக செய்திகள்

UAE: தொடங்கப்பட்ட 15 நாட்களிலேயே 514 மில்லியன் திர்ஹம் நன்கொடயை பெற்ற பிரதமரின் ‘1 பில்லியன் மீல்ஸ் திட்டம்’..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘1 பில்லியன் மீல்ஸ்’ பிரச்சாரம் தொடங்கப்பட்ட 15 நாட்களிலேயே மொத்தம் 514 மில்லியன் திர்ஹம் நன்கொடைகளை பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரமலான் காலத்தில் மிகப்பெரிய அளவில் உணவு உதவியை வழங்கும் நோக்கத்துடன் அமீரகத்தின் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களால் இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

தற்போது நன்கொடையாக கிடைத்துள்ள இந்த மிகப்பெரிய தொகையானது சுமார் 87,000 முக்கிய பங்களிப்பாளர்கள், தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்டது என்றும், இது அமீரகத்தின் கொடை மற்றும் தாராள மனப்பான்மையை பிரதிபலிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ‘1 பில்லியன் மீல்ஸ்’ பிரச்சாரம் 50 நாடுகளில் 1 பில்லியன் உணவுகளை வழங்கியது மற்றும் பசியை ஒழிப்பதற்கான உலகளாவிய முயற்சியில் அமீரகத்தின் பங்களிப்பை மேம்படுத்தியது.

இதுபோல, கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், 2020 ரமலானில் ’10 மில்லியன் மீல்ஸ்’ பிரச்சாரம் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 2021 ரமலானில் ‘100 மில்லியன் மீல்ஸ்’ பிரச்சாரம் தொடங்கப்பட்டு அரபு பிராந்தியம், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள 20 நாடுகளில் பசியைப் போக்க உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து முகமது பின் ரஷீத் அல் மக்தூம் குளோபல் முன்முயற்சிகளின் பொதுச் செயலாளரான முகமது பின் அப்துல்லா அல் கெர்காவி அவர்கள் கூறுகையில், ‘1 பில்லியன் மீல்ஸ்’ பிரச்சாரம் தொடங்கப்பட்ட 15 நாட்களில் 87,000 நன்கொடையாளர்களிடமிருந்து 514 மில்லியன் திர்ஹம் நன்கொடைகளைப் பதிவு செய்துள்ளது, ஐக்கிய அரபு அமீரக மக்களின் கொடுப்பனவு மற்றும் ஒற்றுமையின் மதிப்புகளுக்குச் சான்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!