இன்னும் ஒரு சில நாட்களில் ரமலான் மாதம் துவங்கும் நிலையில் குடியிருப்பாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஃப்தார் கனான் ஃபயரிங் (iftar cannon firing) நிகழ்வுடன் துபாய் ரமலானுக்குத் தயாராகி வருகிறது. அமீரகத்தின் பாரம்பரியமான பீரங்கி சுடும் இந்த நிகழ்வானது, ரமலானின் போது ஒவ்வொரு மாலையும் சூரியன் மறையும் போது தினசரி நோன்பின் முடிவைக் குறிக்ககிறது.
இந்த ஆண்டு, துபாய் காவல்துறை எக்ஸ்போ சிட்டி துபாய், புர்ஜ் கலீஃபா, JBR, ஃபெஸ்டிவல் சிட்டி மற்றும் விடா க்ரீக் ஹார்பர் உள்ளிட்ட பல முக்கிய கனான் ஃபயரிங்கிற்கான இடங்களை அறிவித்துள்ளது. கூடுதல் முக்கிய தளங்கள் எமிரேட்ஸ் விமான நிறுவனம், துபாய் விமான நிலையங்கள் மற்றும் டார் அல் பெர் போன்ற அமைப்புகளுடன் கூட்டாண்மையுடன் ஆதரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒற்றுமை, தாராள மனப்பான்மை மற்றும் கொண்டாட்டத்தை குறிக்கும் ரமலான் பீரங்கி ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகவும் பிரபலமான மரபுகளில் ஒன்றாக உள்ளது.
மேலும், உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில், ஒரு மொபைல் பீரங்கி பல சுற்றுப்புறங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்குச் சென்று, ரமலான் உணர்வை மக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நகரம் முழுவதும் உள்ள 11 சமூக மற்றும் சுற்றுலா தலங்களுக்கு பயணிக்கும்.
இதில் பின்வருவன அடங்கும்:
- உள்ளூர் சுற்றுப்புறங்கள் மற்றும் பள்ளிகள்
- பாப் அல் ஷாம்ஸ் ஹோட்டல்
- மேதான் ஹோட்டல்
- அட்லாண்டிஸ் ஹோட்டல்
- குளோபல் வில்லேஜ்
இந்த மொபைல் பீரங்கி, ரமலான் உணர்வை அதிக சமூகங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது பரந்த பார்வையாளர்கள் பாரம்பரியத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது.
இஃப்தார் நேரத்தில் இயக்கப்படும் இந்த பீரங்கி சுடும் நிகழ்வு நோன்பை முடிப்பதற்கான ஒரு பாரம்பரிய அழைப்பு ஒலி ஆகும். இது ஐக்கிய அரபு அமீரகத்தின் ரமலானை வரையறுக்கும் ஒற்றுமை, விருந்தோம்பல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் மதிப்புகளைக் குறிக்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel