ADVERTISEMENT

ஈத் அல் அதா: 956 கைதிகளுக்கு விடுதலை அளிக்க உத்தரவிட்ட அமீரக அதிபர்..

Published: 20 May 2026, 3:09 PM |
Updated: 20 May 2026, 3:09 PM |
Posted By: admin

கருணையையும் சமூக நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் ஒரு மனிதாபிமான நடவடிக்கையாக, வரவிருக்கும் ஈத் அல் அதாவை முன்னிட்டு, அமீரகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த மையங்களில் இருந்து 956 கைதிகளை விடுவிக்க ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பல்வேறு வழக்குகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தண்டனைக் காலத்தில் சந்தித்த நிதிப் பொறுப்புகளும் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈத் அல் அதாவை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவானது, குடும்பப் பிணைப்புகளை வலுப்படுத்துதல், சமூக ஸ்திரத்தன்மையை ஆதரித்தல், மற்றும் சமூகத்தில் மன்னிப்பையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு பரந்த மனிதாபிமான அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது என அதிகாரிகள் விவரித்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது, ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளர்களின் பாரம்பரியத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது. அவர்கள் முக்கிய மத மற்றும் தேசிய நிகழ்வுகளின் போது, ​​குறிப்பாக தனிநபர்கள் மீண்டும் சமூகத்தில் ஒருங்கிணைவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில், மன்னிப்புகளையும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கை நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்குப் பயனளிக்கிறது. விடுவிக்கப்பட்ட கைதிகள் தங்கள் சமூகங்களுக்குத் திரும்பி, குறைந்த நிதிச் சுமைகளுடன் இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்க இந்த வழிவகுக்கிறது.

ADVERTISEMENT

இது போன்ற முன்னெடுப்புகள் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதோடு, நீதி அமைப்பிற்குள் புனர்வாழ்வு மற்றும் இரண்டாவது வாய்ப்புகளுக்குத் தலைமை தொடர்ந்து அளித்துவரும் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.