ADVERTISEMENT

ஈரான் தாக்குதல் எதிரொலி: அமீரக பள்ளிகளில் வரும் நாட்களில் நேரடி வகுப்புகளா அல்லது ஆன்லைன் வகுப்புகள் தொடருமா..??

Published: 9 May 2026, 9:10 AM |
Updated: 9 May 2026, 9:10 AM |
Posted By: Menaka

ஈரானுடன் தொடர்புடைய பதட்டங்கள் காரணமாக வரும் காலத்தில் பள்ளிகளுக்கான கற்றல் மாதிரியானது, நேரடிக் கற்றலா அல்லது ஆன்லைன் கற்றலா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தற்போதைய சூழ்நிலையை மதிப்பிட்ட பிறகு மே 10 அன்று அறிவிக்கப்படும் என்று அமீரகத்தின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதேபோல், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான கற்றல் மாதிரியும் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிடப்படும் என்று உயர் கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

தேர்வுகள் நேரடி வகுப்புகளுடன் தொடரும்

எவ்வாறாயினும், முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட அட்டவணைகளின்படி தேர்வுகள் மற்றும் சர்வதேச மதிப்பீடுகள் தொடர்ந்து நேரடி வகுப்புகளாக நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

இதற்கிடையில், துபாயின் தனியார் கல்வி நிறுவனங்களுக்கான ஆன்லைன் கற்றல் அல்லது நேரடிக் கற்றல் குறித்து ஞாயிற்றுக்கிழமை வழிகாட்டுதல்களை வெளியிடுவதாக அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் ஏற்பட்ட பிராந்திய பதட்டங்களைத் தொடர்ந்து, மே 5 முதல் மே 8 வரை, ஐக்கிய அரபு அமீரகம் அனைத்துப் பள்ளிகளையும் உயர் கல்வி நிறுவனங்களையும் தற்காலிகமாகத் ஆன்லைன் கற்றலுக்கு மாற்ற உத்தரவிட்டது.

ADVERTISEMENT

கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு ஈரான் புதிய தாக்குதல்களைத் தொடங்கியதை அடுத்து, மே 4 அன்று ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் அவசரகால எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இரு கற்றல் முறைகளுக்கும் பள்ளிகள் தயாராக உள்ளன

இத்தகைய நெருக்கடியான சூழலில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தடையற்ற கற்றல் ஆகிய இரண்டையும் உறுதி செய்வதற்காகவே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

முன்பு கோவிட்-19 பெருந்தொற்றின் போது கற்றுக்கொண்ட பாடங்கள் மூலம் அமைப்புகள் வலுப்படுத்தப்பட்ட நிலையில், தேவைப்படும்போது ஆன்லைன் மற்றும் வகுப்பறை கற்றலுக்கு இடையில் மாறுவதற்கு பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் முழுமையாகத் தயாராக உள்ளன என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், தேவைப்படும்போதெல்லாம் விரைவான மாற்றங்களை அனுமதிக்கும் வகையில், கல்வி நிறுவனங்கள் இப்போது மென்மையான மற்றும் அதிக கட்டமைக்கப்பட்ட ஆன்லைன் கற்றல் அமைப்புகளைக் கொண்டுள்ளன என்று பள்ளித் தலைவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel