ADVERTISEMENT

ஷார்ஜாவில் வெளிநாடு சென்றவரின் வீட்டில் கொள்ளை.. 3 மணி நேரத்தில் 5 லட்சம் திர்ஹம் மதிப்புள்ள பொருட்களை மீட்ட போலீஸ்!!

Published: 3 Aug 2026, 9:13 PM |
Updated: 3 Aug 2026, 9:13 PM |
Posted By: Menaka

வெளிநாட்டில் பயிற்சி முகாமில் இருந்த ஷார்ஜா விளையாட்டு வீரர் ஒருவரின் வீட்டில் நடந்த திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. புகார் கிடைத்ததும் துரிதமாக செயல்பட்ட ஷார்ஜா காவல்துறை, மூன்று மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் சந்தேக நபர்களைக் கண்டறிந்து கிட்டத்தட்ட 500,000 திர்ஹம் மதிப்புள்ள பொருட்களை மீட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இது காவல்துறையின் விரைவான செயல்பாடு மற்றும் மேம்பட்ட புலனாய்வுத் திறனை வெளிப்படுத்தியது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே பயிற்சி முகாமில் பங்கேற்கச் சென்றிருந்த விளையாட்டு வீரர் ஒருவரின் வீட்டில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களை ஷார்ஜா காவல்துறை கைது செய்தது.

ஷார்ஜாவின் குடியிருப்புப் பகுதி ஒன்றில் உள்ள தனது வீட்டில், தான் இல்லாத நேரத்தில் திருட்டு நடந்திருப்பதை அந்த விளையாட்டு வீரர் கண்டறிந்ததையடுத்து இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். உடனடியாக, காவல்துறை அதன் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த சிறப்புப் படைகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர்கள் சம்பவ இடத்தைப் பாதுகாத்து, தடயவியல் சோதனைகளை மேற்கொண்டு, ஆதாரங்களைச் சேகரித்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

ADVERTISEMENT

இந்த நடவடிக்கையின் மூலம் புலனாய்வாளர்கள் விரைவாகச் சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர். மேலும், புகார் கிடைத்த மூன்று மணி நேரத்திற்குள், கிட்டத்தட்ட 500,000 திர்ஹம் மதிப்புள்ள திருடப்பட்ட அனைத்துப் பொருட்களையும் அதிகாரிகள் மீட்டனர்.

ஷார்ஜா காவல்துறை கூறுகையில், இச்சம்பவம் காவல்துறையின் உயர் மட்டச் செயல்பாட்டுத் தயார்நிலையையும், குடியிருப்பாளர்கள் நாட்டிற்குள் இருந்தாலும் அல்லது வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தாலும் அவர்களின் பாதுகாப்பையும் சொத்துக்களையும் பாதுகாப்பதில் உள்ள அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது என்று வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதே தங்கள் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று என்று வலியுறுத்திய அதிகாரிகள், எமிரேட் முழுவதும் பாதுகாப்பைப் பேணவும் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் சிறப்புப் படைகள் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆகவே, வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிடும் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டது. கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பாதுகாப்பாகப் பூட்டப்பட்டிருப்பதை உறுதி செய்தல், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் எச்சரிக்கை அமைப்புகளை (alarm systems) நிறுவுதல், மற்றும் சமூக ஊடகங்களில் பயணத் திட்டங்கள் அல்லது விடுமுறைக்காலத் தகவல்களைப் பகிர்வதைத் தவிர்த்தல் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது குற்றவாளிகளைத் தடுக்கவும், தனிப்பட்ட உடைமைகளைப் பாதுகாக்கவும், குடியிருப்பாளர்கள் மிகுந்த மன அமைதியுடன் பயணம் செய்யவும் உதவும் என்று காவல்துறை தெரிவித்தது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel