ADVERTISEMENT

துபாயில் 190,000 திர்ஹம்ஸ் திருட்டு.. புகார் கிடைத்த 4 நிமிடங்களில் கும்பலை விரட்டிப் பிடித்த இ-ஸ்கூட்டர் ரோந்துப் படை!!

Published: 18 Sep 2026, 8:50 PM |
Updated: 18 Sep 2026, 8:56 PM |
Posted By: Menaka

துபாயில் சுமார் 1,90,000 திர்ஹம் பணத்தைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை, திருட்டு நடந்ததாகத் தகவல் கிடைத்த வெறும் நான்கு நிமிடங்களிலேயே துபாய் போலீஸின் இ-ஸ்கூட்டர் ரோந்துப் படையினர் கைது செய்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ADVERTISEMENT

அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தச் சம்பவம் குறித்த தகவல் செயல்பாடுகளுக்கான பொதுத் துறையின் (General Department of Operations) கட்டுப்பாட்டு மையத்திற்கு (Command-and-Control Centre) தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, சந்தேக நபர்களின் விவரங்கள் மற்றும் அடையாளங்கள் நைஃப் (Naif) பகுதியில் ரோந்து பணியில் இருந்த குழுக்களுக்குப் பகிரப்பட்டன.

இதையடுத்து, நைஃப் காவல் நிலையத்தைச் சேர்ந்த இ-ஸ்கூட்டர் ரோந்துப் படை குழுவினர் வெறும் இரண்டு நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். மேலும், அப்பகுதி முழுவதும் விரைவாகப் பரவிச் செயல்பட்ட அதிகாரிகள், அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் அந்த மூன்று சந்தேக நபர்களையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT

பின்னர், திருடப்பட்ட 1,90,000 திர்ஹம் பணம் சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆரம்பத் தகவல் முதல் பணம் மீட்கப்படும் வரையிலான ஒட்டுமொத்த நடவடிக்கையும் வெறும் நான்கு நிமிடங்களில் நிறைவடைந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

துபாய் காவல்துறையின் ரோந்துப் பணிகள் மற்றும் விரைவான தகவல் பரிமாற்ற முறை ஆகியவை, அமீரகம் முழுவதும் நடைபெறும் குற்றங்கள் குறித்து அதிகாரிகள் எவ்வளவு விரைவாகச் செயல்பட உதவுகின்றன என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel