நாளை துபாய் மெட்ரோ செயல்படும் நேரங்களில் திருத்தம்..!! RTA அறிவிப்பு..!!
துபாயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) துபாய் ரன் நடைபெறுவதன் காரணமாக துபாய் மெட்ரோ நாளை அதிகாலை 3.30 மணிக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் துபாய் ரன்னுக்கு எளிதாகப் பயணம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிவிப்பில் 5 கிமீ பாதையில் ஓடவிருக்கும் பங்கேற்பாளர்கள் எமிரேட்ஸ் டவர்ஸ் அல்லது ஃபைனான்சியல் சென்டர் ஸ்டேஷன்கள் வழியாகவும், 10 கிமீ பாதையில் ஓடவிருக்கும் பங்கேற்பாளர்கள் வேர்ல்டு ட்ரேடு சென்டர் ஸ்டேஷன் அல்லது மேக்ஸ் ஸ்டேஷன் வழியாகவும் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெரிசலைத் தவிர்க்கவும், சரியான நேரத்தில் சென்றடையவும் முன்கூட்டியே வந்து சேருமாறு கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்நிகழ்வை முன்னிட்டு துபாயின் முக்கிய சாலைகள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் நாளை மூடப்படும் முக்கிய சாலைகள்..!! மாற்று வழிகளை அறிவித்த RTA..!!