ADVERTISEMENT

அமீரகத்தில் நாளை வெள்ளிக்கிழமை நோன்பு பெருநாள்.. உறுதிசெய்த அதிகாரிகள்..!!

Published: 20 Apr 2023, 8:02 PM |
Updated: 20 Apr 2023, 8:08 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை பார்க்கும் குழுவானது குடியிருப்பாளர்களை இன்று பிறை பார்க்குமாறு கேட்டுக்கொண்ட நிலையில், இன்று பிறை பார்க்கப்பட்டதாக அமீரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாளானது நாளை (ஏப்ரல் 21, வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் இன்று வியாழக்கிழமை ஏப்ரல் 20, ரமலான் மாதத்தின் கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் பிறை பார்க்கப்பட்டதாக தற்சமயம் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தற்பொழுது அமீரகத்திலும் பிறை பார்க்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் நாளை ஈத் அல் ஃபித்ர் கொண்டாடப்படும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றே, கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் நாளை ஈத் அல் ஃபித்ர் என அறிவிப்பு வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.