இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே “ஏர் பபுள்” ஒப்பந்தம் போடப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் இருந்தும் அமீரகத்திற்கு சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இருந்து இயக்கப்பட்டு வரும் சிறப்பு விமான சேவைகள் மூலம் இந்தியாவில் சிக்கி தவித்த அமீரக குடியிருப்பாளர்கள் தற்பொழுது அமீரகம் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு வருபவர்கள் கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருப்பது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டு அதன்படி பயணிகள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது அக்டோபர் மாதத்தில் இயக்கப்படும் சிறப்பு விமானங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்பொழுது வெளியிட்டுள்ள விமானங்களில் 46 விமானங்கள் தமிழகத்தில் இருந்து அமீரகத்திற்கு இயக்க ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலான விமானங்கள் திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களில் இருந்தே இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் இருந்து அமீரகத்திற்கு இயக்கப்படும் விமானங்களின் பட்டியல்
சென்னையில் இருந்து அமீரகத்திற்கு இயக்கப்படும் விமானங்களின் பட்டியல்

