ADVERTISEMENT

துபாய்: ரமலானை முன்னிட்டு 2 மணி நேர இலவச பார்க்கிங்.. பொது போக்குவரத்து சேவையிலும் மாற்றம் அறிவிப்பு…

Published: 17 Feb 2026, 8:22 AM |
Updated: 17 Feb 2026, 8:22 AM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) புனித ரமலான் மாதத்திற்கான திருத்தப்பட்ட பொது பார்க்கிங் மற்றும் போக்குவரத்து நேரங்களை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

பொது பார்க்கிங் நேரங்கள்

RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, திங்கள் முதல் சனிக்கிழமை வரை, கட்டண பார்க்கிங் இரண்டு ஷிப்டுகளில் பொருந்தும்:

  • காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
  • இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை

இதன் மூலம் பார்க்கிங் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இலவசமாக இருக்கும், இதனால் குடியிருப்பாளர்கள் இஃப்தார் நேரங்களில் இரண்டு மணி நேர இலவச பார்க்கிங்கைப் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பல மாடி பார்க்கிங் இடங்கள் 24/7 என முழுநேரமும் தொடர்ந்து செயல்படும் என்பதையும் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

துபாய் மெட்ரோ & டிராம் நேரங்கள்

துபாய் மெட்ரோ ரெட் லைன் மற்றும் கிரீன் லைன் நிலையங்கள்:

  • திங்கள் முதல் வியாழன் வரை: காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை
  • வெள்ளி: காலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை (அடுத்த நாள்)
  • சனிக்கிழமை: காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை
  • ஞாயிற்றுக்கிழமை: காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை

துபாய் டிராம்

  • திங்கள் முதல் சனி வரை: காலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை (அடுத்த நாள்)
  • ஞாயிற்றுக்கிழமை: காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை (அடுத்த நாள்)

மேலும், புதுப்பிக்கப்பட்ட பொது பேருந்து நேரங்களுக்கு, பயணிகள் S’hail செயலியை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள், அதே நேரத்தில் கடல் போக்குவரத்து அட்டவணைகள் RTA இணையதளத்தில் கிடைக்கின்றன.

ADVERTISEMENT

அதேபோல், வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் மற்றும் வாகன ஆய்வு மையங்கள் போன்ற சேவை வழங்குநர்களுக்கான திருத்தப்பட்ட நேரங்களையும் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த திருத்தப்பட்ட போக்குவரத்து அட்டவணைகள், பார்க்கிங் தளர்வுகள் மற்றும் சரிசெய்யப்பட்ட சுங்க நேரங்கள் மூலம், ரமலான் மாதத்தில் சீரான இயக்கத்தை உறுதி செய்வதை துபாய் அதிகாரிகள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

ரமலான் மாத பிறை

ரமலான் தொடக்கத்தை உறுதிப்படுத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை பார்ப்பதற்கான குழுவானது, இன்று (பிப்ரவரி 17) கூடும். இதே போல் சவூதி அரேபியாவும், பிறையைப் பார்ப்பது குறித்து உள்ளூர் நீதிமன்றங்கள் அல்லது அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு சவுதி அரசு குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel